.

Pages

Thursday, December 29, 2016

அமீரகத்தில் கடும் பனிப்பொழிவு !

அதிரை நியூஸ்: துபாய், டிச-29
அமீரக தேசிய வானிலை மைய அறிவித்தலின்படி, அமீரகத்தில் நிலவும் கடும் பனிப்படலாம் மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என அறிவித்துள்ளதை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதுடன் டிரைவர்கள் அதிக கவனத்துடன் இயங்குமாறும், கண்ணாடிகளை சுத்தமாவும், விளக்குகளை எரியவிட்டவாறு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

அமீரகத்தில் காலை வேளைகளில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சாலை போக்குவரத்தும் விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் அனைத்து விமான நிலைய தகவல்களும் தெரிவிக்கின்றன. ஒரு சில விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கும் தற்காலிகமாக திருப்பிவிடப்பட்டன.

பல விமானிகளுக்கு இதுபோன்ற கடும் பனிப்படல காலத்தில் விமானத்தை தரையிறக்கும் அனுபவமும் அதற்கான சிறப்பு லைசென்ஸ் இல்லாதவர்களும் திருப்பிவிடப்பட்டனர். சில எமிரேட்ஸ் விமானங்கள் பெட்ரோல் நிரப்புவதற்காக துபை வேல்டு சென்ட்ரல் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு மீண்டும் துபை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன.

துபையில் மட்டும் நேற்று அதிகாலை 4 மணிமுதல் 9 மணிமுதல் வரை 119 சிறு வாகன விபத்துக்கள் நடந்துள்ளன. மேலும் 1,892 பேர் தொலைபேசி வழியாக புகாரும் தெரிவித்துள்ளதாக துபை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.