.

Pages

Tuesday, December 27, 2016

பட்டுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர் வீட்டில் தீ !

பட்டுக்கோட்டை, டிச-27
பட்டுக்கோட்டையில் திங்கள்கிழமை குடிசை வீட்டில் நேரிட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தது.

பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையை சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் அ. ஷேக்கபீர் (40). இவர் தனது வீட்டின் தரைத்தளத்தை வாடகைக்கு விட்டுள்ளார். வீட்டின் மாடியில் கீற்றுக்கூரை போட்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் இவர் வீட்டின் கூரையில் திடிரென தீ பிடித்தது.

தகவலறிந்த பட்டுக்கோட்டை தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீ பரவாமல் அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இந்த தீ விபத்தில் ஷேக்கபீர் வீட்டிலிருந்த அலமாரி, கட்டில், டி.வி, பிரிட்ஜ் மற்றும் பல்வேறு பொருள்கள் எரிந்து சாம்பலாயின.

சம்பவயிடத்தை எம்எல்ஏ சி.வி. சேகர், வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன், அதிமுக நகரச் செயலர் சுப. ராஜேந்திரன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் பி.கே. நாடிமுத்து உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

செய்தி: தினமணி
படங்கள்: நிருபர் ஐ.எம் ராஜா
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.