.

Pages

Sunday, December 18, 2016

அதிரையின் பிரதான வீதிகளில் குவியும் குப்பைகளை அகற்ற கோரிக்கை !

அதிராம்பட்டினம், டிச-17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 1 முதல் 21 வார்டுகள் வரை உள்ள பிரதான வீதிகளில் குவியும் குப்பைகளை அப்புறப்படுத்தாதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனை அப்புறப்படுத்த உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்; "தினமும் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 21 வரை உள்ள வார்டு பகுதிகளில் தேங்கும் குப்பைகளை அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் டிராக்டர் வாகனம் மூலம் அப்புறப்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக குப்பைகளை அள்ளிச்செல்ல பணியாளர்கள் சரிவர வருவதில்லை. இதனால் அதிராம்பட்டினம் பிரதான சாலைகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. சாலைவழியே செல்லும் ஆடு, மாடுகள் இவற்றை கிளறுவதால்
துர் நாற்றம் வீசி வருகிறது. தேங்கிக் கிடக்கும் குப்பையினால் தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகள் உடனடியாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.