அதிரை நியூஸ்: சவூதி அரபியா, டிச-27
2011 ஆம் ஆண்டு முதல் சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரினால் இதுவரை சுமார் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர், சிரியாவின் மொத்த மக்கள் தொகையில் சரிபாதியான சுமார் 11 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரங்களில் சிரியா, ரஷ்யா மற்றும் ஈரானின் கொடுங்கோல் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் அலெப்போ நகரமே நரகமானது, இதனால் அலெப்போவில் வாழ்ந்த மக்கள் நிர்க்கதியாய் உணவின்றியும், உடையின்றியும், மருந்தின்றியும், தங்க இடமின்றியும் வெட்டவெளிகளில் கடும் குளிரில் பரிதவித்து வருகின்றனர்.
அநியாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சிரிய மக்களுக்கு உணவு, மருந்து, உடைகள், தற்காலிக தங்குமிடம் மற்றும் குளிருக்கு தேவையான பொருட்களை வழங்கும் பொருட்டு சவுதி மன்னர் சல்மான் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அரசு சார்பாக 100 மில்லியன் ரியால்களை விடுவித்ததுடன் நாடு தழுவிய அளவில் பொதுமக்களிடம் நிதி திரட்டும் திட்டமும் (Kingdom wide fund raising campaign) துவங்கப்பட்டுள்ளது.
மேலும், சவுதி மன்னர் சல்மான் அவர்களின் தனிப்பட்ட பங்களிப்பாக 20 மில்லியன் ரியால்களும், முதலாம் பட்டத்து இளவரசர் (Crown Prince) முஹமது பின் நாயிஃப் அவர்கள் சார்பாக 10 மில்லியன் ரியால்களும், இரண்டாம் பட்டத்து இளவரசர் (Deputy Crown Prince) முஹமது பின் சல்மான் அவர்கள் சார்பாக 8 மில்லியன் ரியால்களும் இத்திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஜோர்டான், துருக்கி, லெபனான் மற்றும் சிரியாவின் உட்பகுதிகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கான உதவிகளும் வழமைபோல் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
2011 ஆம் ஆண்டு முதல் சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரினால் இதுவரை சுமார் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர், சிரியாவின் மொத்த மக்கள் தொகையில் சரிபாதியான சுமார் 11 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரங்களில் சிரியா, ரஷ்யா மற்றும் ஈரானின் கொடுங்கோல் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் அலெப்போ நகரமே நரகமானது, இதனால் அலெப்போவில் வாழ்ந்த மக்கள் நிர்க்கதியாய் உணவின்றியும், உடையின்றியும், மருந்தின்றியும், தங்க இடமின்றியும் வெட்டவெளிகளில் கடும் குளிரில் பரிதவித்து வருகின்றனர்.
அநியாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சிரிய மக்களுக்கு உணவு, மருந்து, உடைகள், தற்காலிக தங்குமிடம் மற்றும் குளிருக்கு தேவையான பொருட்களை வழங்கும் பொருட்டு சவுதி மன்னர் சல்மான் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அரசு சார்பாக 100 மில்லியன் ரியால்களை விடுவித்ததுடன் நாடு தழுவிய அளவில் பொதுமக்களிடம் நிதி திரட்டும் திட்டமும் (Kingdom wide fund raising campaign) துவங்கப்பட்டுள்ளது.
மேலும், சவுதி மன்னர் சல்மான் அவர்களின் தனிப்பட்ட பங்களிப்பாக 20 மில்லியன் ரியால்களும், முதலாம் பட்டத்து இளவரசர் (Crown Prince) முஹமது பின் நாயிஃப் அவர்கள் சார்பாக 10 மில்லியன் ரியால்களும், இரண்டாம் பட்டத்து இளவரசர் (Deputy Crown Prince) முஹமது பின் சல்மான் அவர்கள் சார்பாக 8 மில்லியன் ரியால்களும் இத்திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஜோர்டான், துருக்கி, லெபனான் மற்றும் சிரியாவின் உட்பகுதிகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கான உதவிகளும் வழமைபோல் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.