.

Pages

Saturday, December 31, 2016

மல்லிபட்டினம் அருகே வியாபாரிடம் வெள்ளிக் கொலுசு திருட்டு !

மல்லிபட்டினம், டிச-31
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிபட்டினம் அருகே கொலுசு வியாபாரியிடம் கொலுசை பறித்து சென்ற இருவரில் ஒருவரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் ஆர்.வெங்கடாசலம் (62) கொலுசு வியாபாரி. கடலோர கிராம பகுதிகளில் சைக்கிளில் சென்று வீடு வீடாக வியாபாரம் செய்பவர். வியாழக்கிழமை அன்று மல்லிப்பட்டினம் சென்று வியாபாரம் செய்து விட்டு சேதுபாவாசத்திரம் வந்து கொண்டிருந்த போது சுடுகாடு அருகே சைக்கிளை நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை கழித்துள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சைக்கிளில் இருந்த ஒரு கிலோ வெள்ளி கொலுசை எடுத்துகொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவரான சேதுபாவாசத்திரம் கடற்கரை தெருவை சேர்ந்த மா.மாதவன் (23) என்பவரை கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கொலுசுடன் தப்பி சென்ற மற்றொருவரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.