தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடைத்தெரு பகுதியில் பிராய்லர் கோழிக்குஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு ஜோடி குஞ்சு ரூ. 10 க்கு விற்கப்படுகிறது. பிராய்லர் கோழி முட்டைகள் எந்திரம் மூலம் கோழிக்குஞ்சு பொரிக்கப்படுகிறது. இதில் பல்வேறு வண்ணங்களை பூசி விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து அதிரை பகுதிகளில் விற்பனை செய்துவரும் திருவாரூர் மாவட்டம், எடப்பாடி கிராமத்தை சேர்ந்த கோழிக்குஞ்சு வியாபாரி மாதையன் கூறுகையில்; 'நாமக்கல் மாவட்டம், பொங்கலூரில் இருந்து பிராய்லர் கோழி குஞ்சு மொத்தமாக வாங்கி வருகிறோம். கோழிக்குஞ்சுக்கு பல்வேறு வண்ணம் பூசி, விற்பனை செய்கிறோம். தற்போது இதற்கு உணவாக கம்பரிசியும், தண்ணீரும் கொடுக்கிறோம். நாலாபுறமும் அட்டைப்பெட்டி மூலம் தடுப்பு வைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். ஒரு ஜோடி குஞ்சு ரூ. 10 க்கு விற்பனை செய்கிறேன். நாள் ஒன்றுக்கு 300 குஞ்சுகள் வரை விற்பனை ஆகிறது. சிறுவர்கள் இதை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்' என்றார்.
உலகமே கோரோனா வைரஸ் தாக்குதலை
ReplyDeleteஎதிர்கொண்டு வரும் வேளையில்
முத்துப்பேட்டையில் திடீரென்று
கலர் கோழி குஞ்சு
விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வைரஸ் தாக்கம் மற்றும் மக்கள் ஆரோக்கியத்தை யார் உறுதிப்படுத்துவது