.

Pages

Thursday, December 22, 2016

பட்டுக்கோட்டை பகுதிகளில் நகை, பணம் திருடியவர் கைது !

திருவாரூர் மாவட்டம், வாழவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளி சக்கரை (எ) சக்கரவர்த்தி (24). செவ்வாய்க்கிழமை பட்டுக்கோட்டையில் நகைகளை விற்க வந்த இவரை பட்டுக்கோட்டை போலீஸார் சந்தேகத்தின்பேரில் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில் சர்க்கரவர்த்தி கடந்த ஜூலை மாதம் பட்டுக்கோட்டை அடுத்த ஆலத்தூர் வீதியில் நடந்து சென்ற முருகன் மனைவி பொற்கொடியிடம் 3 பவுன் சங்கிலி, கடந்த அக்டோபர் மாதம் அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி ஜோதியிடம் (55) எட்டரை பவுன் சங்கிலி, கடந்த ஜூலை மாதம் திருச்சிற்றம்பலத்தில் ஷேக்அப்துல்லா என்பவரின் எலெக்ட்ரிக்கல் கடையில் ரூ. 25 ஆயிரம் ரொக்கம், ஒட்டங்காட்டில் நவாஸ்கான் மளிகைக் கடையில் ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் பதினொன்றரை பவுன் நகைகளை மீட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.