.

Pages

Tuesday, December 20, 2016

போலி முட்டைகள் விற்பனையா ? உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

தஞ்சாவூரில் போலி முட்டைகள் விற்பனை செய்யப்படுகிறதா என உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் போலி முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், தஞ்சாவூரில் கீழ வாசல், காவேரி நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள முட்டைக் கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

இதேபோல, மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டதாகவும், யாரேனும் போலி முட்டைகளை விற்பனை செய்வதாகத் தெரிய வந்தால் அவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட பிரிவுகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.