.

Pages

Wednesday, December 28, 2016

அதிரை அருகே ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை திறப்பு !

அதிராம்பட்டினம், டிச-28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடையை பேராவூரணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மா.கோவிந்தராசு திறந்து வைத்து பேசினார்.

உலக அளவில் வெளிநாட்டு பணப்பரிமாற்றம் செய்து வரும் பால் மெர்ச்சண்ட்ஸ், வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் சார்பில் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி புதுப்பட்டினம் பஸ் நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு குழ. சுந்தர்ராஜன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா. கோவிந்தராசு பயணியர் நிழற்கூடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் பால் மெர்ச்சண்ட்ஸ் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கர்நாடக தலைவர் கே .கோவிந்தராஜன் , வெஸ்டர்ன் யூனியன் தமிழ்நாடு வாணிப மேம்பாட்டு மேலாளர் பிரேம் சுகுணேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் பால் மெர்ச்சண்ட்ஸ் நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
 



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.