.

Pages

Monday, December 26, 2016

கால்நடைகள் ஏலம் !

ஒரத்தநாடு வட்டம், நடுவூரில் கால்நடை பண்ணையில், பண்ணை உபயோகத்திற்கு போக கழிவு செய்யப்பட்ட கால்நடைகள் வருகின்ற 06.01.2017 அன்று  பண்ணை வளாகத்தில் பொது ஏலமிடப்படும் என துணை இயக்குநர் (காப) டாக்டர் ந. இராமசாமி அவர்கள்
தகவல் தெரிவித்துள்ளார்.

ஏலமிடப்படும் கால்நடைகளின் விபரம்:
கறவை மாடுகள் 8, கிடேரி 1, காளைக்கன்றுகள் 6, எருமைக் காளைக் கன்றுகள் 11, கலப்பின ஜெர்சி காளைக் கன்றுகள் 2, கலப்பின ர்கு காளைக் கன்றுகள் 6, கறவை மற்றும் வற்று ஜெர்சி மாடுகள் 5 ஆக மொத்தம்  39 ஆகும்
   
ஏலத்தில் கலந்து கொள்ளவிரும்புவோர் டேவணித்தொகை ரூ.20000/- (ரூபாய் இருபது ஆயிரம் மட்டும்) DEPUTY DIRECTOR, District Livestock Farm, Naduvur” என்ற பெயரில் வங்கி வரைவோலையை பாரத வங்கி, ஒரத்தநாட்டில் மாற்ற தக்க வகையில் பெறப்படும் வங்கி வரைவோலையாக துணை இயக்குநர் அலுவலகத்தில் 05.01.2017 அன்று காலை 10.30 மணி முதல் மாலை 4.00 வரை பெறப்படும்.

வைப்புத் தொகையாக செலுத்தப்படும் வங்கி வரைவோலைகள் அனைத்தும் 30.12.2016 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பெறப்பட்ட வங்கி வரைவோலைகள் இருக்க வேண்டும்.  அதற்கு முந்திய தேதியில் வரைவோலைகள் ஏற்க இயலாது.  ஏலத்தில வங்கி வரைவோலைகள் கொடுத்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.  காவல்துறை உதவியுடன் ஏலம் நடத்தப்படும்.
   
05.01.2017-ம் தேதி மாலை 4.00 மணிக்கு மேல் ஏலத்தில் கலந்து கொள்ள பதிவுகள் மேற்கொள்ளப்படமாட்டாது. 05.01.2017-ம் தேதிக்குள் டேவணித் தொகைக்கு வரைவோலை கொடுத்து பதிவு செய்தவர்கள் மட்டுமே 06.01.2017 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

ஏலம் எடுத்தவர், ஏலம் எடுத்தவுடன் ஏலம் கோரிய முழுத்தொகையையும் ரொக்கமாக செலுத்திட வேண்டும். அவ்வாறு செலுத்த தவறினால் அவரால் செலுத்தப்பட்ட டேவணித்தொகையை அவர் இழக்க நேரிடும்.  ஏலம் முடிந்தவுடன் ஏலம் எடுத்த ஏலத்தாரர்கள் தவிர ஏலத்தில் கலந்து கொண்ட இதர நபர்களின் டேவணித்தொகைக்கான வங்கி வரைவு திருப்பி கொடுக்கப்படும்.

ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக முழுத்தொகையையும் ரொக்கமாக செலுத்தி அன்றைய தினமே கால்நடைகளை பெற்று செல்லவேண்டும். மற்றைய வகையில் இழப்பு ஏற்பட்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பு ஏற்காது.  ஏலம் முறையாகவும், எந்தவித குழப்பமும் இல்லாமலும் நடைபெற ஏலதாரர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். குடி போதையில் இருப்பவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்படும்.
   
ஏலம் சம்மந்தமாக ஏற்படும் சர்ச்சைகளுக்கு நடுவூர், மாவட்ட கால்நடை பெருக்குப்பண்ணையின் ஏலக்கமிட்டியினரால் எடுக்கப்படும் முடிவே இறுதியானது. ஏலம் நடைபெறவுள்ள இரண்டு தினங்களுக்கு முன்பு முதல் ஏலமிடப்படவுள்ள கால்நடைகளை பணி நேரங்களில் அனுமதி பெற்று பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.  தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால் ஏலத்தை நிறுத்தவோ, தள்ளி வைக்கவோ ஏலக்கமிட்டியினருக்கு அதிகாரம் உண்டு.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.