.

Pages

Wednesday, December 28, 2016

டெல்லி விமான நிலையத்தில் பெரும் விமான விபத்து தவிர்ப்பு !

அதிரை நியூஸ்:டிச-28
நேற்று காலை டெல்லி விமான நிலையத்தில் இன்டிகோ விமானமும் ஸ்பைஸ்ஜெட் விமானமும் ஒரே ஓடுதளத்தில் நேருக்கு நேர் மோதவிருந்த நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இன்று அதிகாலை சுமார் 7.30 மணியளவில் லக்னோவிலிருந்து வந்த இன்டிகோ விமானம் டெல்லி விமான நிலையத்தில் 176 பயணிகளுடன் தரையிறங்கியது அப்போது அதே ஓடுதளத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஹைதராபாத் புறப்பட சென்று கொண்டிருந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் விமானி உடனே விமானத்தை நிறுத்திவிட்டு வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு (Air Traffic Controller) தகவல் கொடுத்தனர்.

இந்த தவறு வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தினாலேயே ஏற்பட்டிருக்கக்கூடும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக, இன்று மட்டும் கோவாவில் 1, டெல்லியில் 1 என 2 விமான விபத்துக்கள் இந்தியாவில் இறையருளால் தவிர்க்கப்பட்டுள்ளன.

தகவலுக்காக: 
1996 ஆம் ஆண்டு டெல்லியிலிருந்து தம்மாம் (தஹ்ரான்) புறப்பட்ட சவுதி ஏர்லைன்ஸ் விமானமும் கஜாகிஸ்தான் நாட்டு விமானமும் வடக்கு டெல்லியின் சர்க்கி தாத்ரி எனும் கிராமத்திற்கு மேல் நடுவானில் சுமார் 15,000 அடி உயரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் சவுதி விமானத்தில் இருந்த 312 பேர் உட்பட இருவிமானத்தையும் சேர்ந்த மொத்தம் 359 பேர் மரணமடைந்தனர். இதுவும் டெல்லி வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து வழிநடத்தப்பட்ட தவறான தகவலால் நிகழ்ந்தவையே. இந்த விபத்து வான்வெளியில் நடந்த பெரும் விமான விபத்தாகவும், உலகின் 3வது பெரும் விமான விபத்தாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1977 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி ஸ்பெயின், கெனாரி தீவில் (Canary Islands) அமைந்துள்ள டெனரீப் விமான நிலைய (Tenerife Airport) ஓடுபாதையில் KLM விமானமும் PAN AM விமானமும் மோதிக்கொண்டதில் 583 பேர் பலியான சம்பவம் முதலிடத்திலும்,

1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி டோக்கியோவிலிருந்து ஓசாகா விமான நிலையத்திற்கு 509 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தவறான தொடர் பராமரிப்பினால் மிகுந்த கேபின் அழுத்தத்திற்கு உள்ளாகி வெடித்துச் சிதறியதில் 505 பேர் பலியான சம்பவம் உலகின் 2வது பெரிய விமான விபத்தாகவும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Sources: NDTV / Indian Express / Wikipedia
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.