அதிரை நியூஸ்: கத்தார்,டிச-22
2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் முதல் மெட்ரோ ரயில் இயங்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் நடைபெற்று வரும் தோஹா மெட்ரோ ரயில் திட்டப்பணிகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 44.8 சதவிகித பணிகள் நிறைவுற்றுள்ளன.
32 கி.மீ தூரத்திற்கு 35 ஸ்டேஷன்களுடன் அமையவுள்ள இந்தத் திட்டத்தின் ரெட் லைன் எனப்படும் 'லுசைல் முதல் வக்ராஹ்' (Lusail to Wakrah) வரையுள்ள நிலவடி (Under Ground Stretch) ரெயில் பாதை 13.6 கி.மீ தூரத்திற்கு நிறைவு பெற்றுள்ளன. மேலும் அதே ரெட் லைனில் உயர்த்தப்பட்ட (Elevated Route) பாதை 8.9 கி.மீ தூரத்திற்கும் நிறைவுற்றுள்ளன.
2022 ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், கால்பந்து போட்டியின் பிரதான ஸ்டேடியம் லுசைலில் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், சவுதியுடன் இணைக்கும் 486 கி.மீ நீள ரயில்வே திட்டமும் 2019 ஆம் ஆண்டிற்குள் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டப்பணிகள் 5 கட்டங்களாக நிறைவேற்றப்படவுள்ளன.
Source: Gulf Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் முதல் மெட்ரோ ரயில் இயங்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் நடைபெற்று வரும் தோஹா மெட்ரோ ரயில் திட்டப்பணிகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 44.8 சதவிகித பணிகள் நிறைவுற்றுள்ளன.
32 கி.மீ தூரத்திற்கு 35 ஸ்டேஷன்களுடன் அமையவுள்ள இந்தத் திட்டத்தின் ரெட் லைன் எனப்படும் 'லுசைல் முதல் வக்ராஹ்' (Lusail to Wakrah) வரையுள்ள நிலவடி (Under Ground Stretch) ரெயில் பாதை 13.6 கி.மீ தூரத்திற்கு நிறைவு பெற்றுள்ளன. மேலும் அதே ரெட் லைனில் உயர்த்தப்பட்ட (Elevated Route) பாதை 8.9 கி.மீ தூரத்திற்கும் நிறைவுற்றுள்ளன.
2022 ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், கால்பந்து போட்டியின் பிரதான ஸ்டேடியம் லுசைலில் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், சவுதியுடன் இணைக்கும் 486 கி.மீ நீள ரயில்வே திட்டமும் 2019 ஆம் ஆண்டிற்குள் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டப்பணிகள் 5 கட்டங்களாக நிறைவேற்றப்படவுள்ளன.
Source: Gulf Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.