அதிராம்பட்டினம், மே-13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் கணினி மென்பொருள் பயிற்சி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கம்ப்யூட்டர்கள் எரிந்து கருகியது.
பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் கேசவன். இவர் அதிராம்பட்டினம், பெருமாள் கோவில் தெரு பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக கணினி மென்பொருள் பயிற்சி நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்நிறுவனத்தில் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வந்தனர்.
இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை பயிற்சி நிறுவனத்தில் திடீரென தீ பரவி ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த விபத்தில், ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 2 கம்ப்யூட்டர்கள் சேதமடைந்தது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பயிற்சியின்போது தீ விபத்து நிகழ்ந்திருந்தால், பலத்த உயிர்சேதம் ஏற்பட்டிருக்க கூடும். இதுதொடர்பாக, அதிராம்பட்டினம் போலீசார் கணினி பயிற்சி நிறுவன மேலாளர் கேசவன், கட்டிட உரிமையாளர் இப்ராஹீம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் கணினி மென்பொருள் பயிற்சி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கம்ப்யூட்டர்கள் எரிந்து கருகியது.
பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் கேசவன். இவர் அதிராம்பட்டினம், பெருமாள் கோவில் தெரு பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக கணினி மென்பொருள் பயிற்சி நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்நிறுவனத்தில் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வந்தனர்.
இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை பயிற்சி நிறுவனத்தில் திடீரென தீ பரவி ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த விபத்தில், ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 2 கம்ப்யூட்டர்கள் சேதமடைந்தது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பயிற்சியின்போது தீ விபத்து நிகழ்ந்திருந்தால், பலத்த உயிர்சேதம் ஏற்பட்டிருக்க கூடும். இதுதொடர்பாக, அதிராம்பட்டினம் போலீசார் கணினி பயிற்சி நிறுவன மேலாளர் கேசவன், கட்டிட உரிமையாளர் இப்ராஹீம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.