அதிரை நியூஸ்: மே-14
துருக்கியின் இஜ்மிர் )Izmir) விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு தாமஸ்குக் நிறுவன விமானம் பறக்கத் தயாராகவிருந்த நிலையில் துருக்கிக்கு சுற்றுலா வந்திருந்த 2 ஐரோப்பிய பெண்கள் 2 முஸ்லீம் வாலிபர்கள் மீது சந்தேகப்பட்டு, அவர்கள் சைகை மொழியில் பேசிக்கொள்வதாகவும், மொபைல் போனை கழிவறையில் உபயோகிப்பதாகவும் விமான ஊழியர்களிடம் குற்றம் சுமத்தினர்.
குற்றசாட்டை தொடர்ந்து 2 முஸ்லீம் வாலிபர்களும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு மறுபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் எனினும் அந்தப் பெண்கள் கூறியதுபோல் அவர்களிடம் எத்தகைய அச்சுறுத்தலுக்குரிய அம்சங்களுமில்லாததால் மீண்டும் அவர்கள் அதே விமானத்தில் பறக்க அனுமதிக்கப்பட்டனர் ஆனால் 2 பெண்களும் இந்த 2 முஸ்லீம்களுடனும் தொடர்ந்து பயணிக்க மறுத்துவிட்டனர். பின்பு விமானம் 80 நிமிட தாமதத்திற்குப் பின் புறப்பட்டுச் சென்றது.
இதுவே, அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் இஸ்லாமோபோபியா எனும் சந்தேக நோயால் விளைந்த இக்குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருக்கப்படுமாயின் 2 இளைஞர்களும் இறக்கி விடப்பட்டிருப்பார்கள், துருக்கி என்பதால் இஸ்லாமோபோபியாவால் பாதிக்கப்பட்டு அநியாயமாக அந்த முஸ்லீம் இளைஞர்கள் மீது குற்றச்சாட்டிய பெண்களே இறங்கிக் கொண்டனர்.
இந்த யூத, கிருஸ்தவ மீடியாக்களால் பரப்பி விடப்பட்ட இஸ்லாமோபோபியா எனும் சந்தேக நோயின் விளைவாய் முஸ்லீம்கள் விமானத்தில் ஏறினால் சந்தேகம், விமானத்தில் சிரித்தால் சந்தேகம், விமானத்தில் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பினால் சந்தேகம், தும்மினால் சந்தேகம், 2 அரேபியர்கள் அரபியில் பேசிக் கொண்டால் சந்தேகம், சும்மா இருந்தாலும் சந்தேகம் என்று முஸ்லீம்களாய் இருப்பதற்காகவே சகலத்தின் மீதும் சந்தேகப்படும் மேற்கத்தியர்களை பீடித்துள்ள நோய் என்று ஒழியுமோ தெரியவில்லை.
Source: The Independent / Msn
தமிழில்: நம்ம ஊரான்
துருக்கியின் இஜ்மிர் )Izmir) விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு தாமஸ்குக் நிறுவன விமானம் பறக்கத் தயாராகவிருந்த நிலையில் துருக்கிக்கு சுற்றுலா வந்திருந்த 2 ஐரோப்பிய பெண்கள் 2 முஸ்லீம் வாலிபர்கள் மீது சந்தேகப்பட்டு, அவர்கள் சைகை மொழியில் பேசிக்கொள்வதாகவும், மொபைல் போனை கழிவறையில் உபயோகிப்பதாகவும் விமான ஊழியர்களிடம் குற்றம் சுமத்தினர்.
குற்றசாட்டை தொடர்ந்து 2 முஸ்லீம் வாலிபர்களும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு மறுபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் எனினும் அந்தப் பெண்கள் கூறியதுபோல் அவர்களிடம் எத்தகைய அச்சுறுத்தலுக்குரிய அம்சங்களுமில்லாததால் மீண்டும் அவர்கள் அதே விமானத்தில் பறக்க அனுமதிக்கப்பட்டனர் ஆனால் 2 பெண்களும் இந்த 2 முஸ்லீம்களுடனும் தொடர்ந்து பயணிக்க மறுத்துவிட்டனர். பின்பு விமானம் 80 நிமிட தாமதத்திற்குப் பின் புறப்பட்டுச் சென்றது.
இதுவே, அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் இஸ்லாமோபோபியா எனும் சந்தேக நோயால் விளைந்த இக்குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருக்கப்படுமாயின் 2 இளைஞர்களும் இறக்கி விடப்பட்டிருப்பார்கள், துருக்கி என்பதால் இஸ்லாமோபோபியாவால் பாதிக்கப்பட்டு அநியாயமாக அந்த முஸ்லீம் இளைஞர்கள் மீது குற்றச்சாட்டிய பெண்களே இறங்கிக் கொண்டனர்.
இந்த யூத, கிருஸ்தவ மீடியாக்களால் பரப்பி விடப்பட்ட இஸ்லாமோபோபியா எனும் சந்தேக நோயின் விளைவாய் முஸ்லீம்கள் விமானத்தில் ஏறினால் சந்தேகம், விமானத்தில் சிரித்தால் சந்தேகம், விமானத்தில் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பினால் சந்தேகம், தும்மினால் சந்தேகம், 2 அரேபியர்கள் அரபியில் பேசிக் கொண்டால் சந்தேகம், சும்மா இருந்தாலும் சந்தேகம் என்று முஸ்லீம்களாய் இருப்பதற்காகவே சகலத்தின் மீதும் சந்தேகப்படும் மேற்கத்தியர்களை பீடித்துள்ள நோய் என்று ஒழியுமோ தெரியவில்லை.
Source: The Independent / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.