.

Pages

Tuesday, May 2, 2017

துபாயில், குழந்தையால் தண்டனை பெற்ற இந்திய தந்தை !

அதிரை நியூஸ்: மே-02
துபையில் இந்தியர் ஒருவர் கார் ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது அவரது 5 வயது மகன் 'சன் ரூப்' (Sun Roof) எனப்படும் காரின் மேற்கூரையின் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்ததை பின்னால் வந்த ஒருவர் படமெடுத்து துபை போலீஸ் துறைக்கு அனுப்ப, அவரது கார் பதிவு எண்ணை கொண்டு போலீஸார் அவரை உடனடியாக உம்மு சுகைம் பகுதியில் மடக்கிய போது தான் தெரிந்தது, அவர் பணியாற்றும் கம்பெனிக்குச்  சொந்தமான அந்தக் காரின் லைசென்ஸூம் கடந்த நவம்பர் மாதமே காலாவதியாகி உள்ள விஷயம்.

தன்னுடைய பிள்ளையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கிய குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் லைசென்ஸ் இல்லாத காரை செலுத்திய குற்றத்திற்காக காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த இந்தியத் தந்தை 'இது குற்றம் என்பதே தெரியாது' என்று சொன்ன பொறுப்பற்ற வாக்குமூலத்தால் அவருக்கு மேலும் பல பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.