.

Pages

Sunday, May 14, 2017

முன்னாள் அதிரை சேர்மனுக்கு ஜப்பானில் வரவேற்பு ( படங்கள் )

2011-2016 ஆம் ஆண்டு அதிராம்பட்டினம் பேரூராட்சி பெருந்தலைவராக பொறுப்பில் இருந்தவர் எஸ்.எச் அஸ்லம். இவர் தொழில் நிமித்தமாக கடந்த சில வாரங்களில் இரண்டாவது முறையாக ஜப்பான் நாட்டுக்கு பயணமானார். இந்நிலையில், ஜப்பானில் வசிக்கும் அதிராம்பட்டினம் பகுதியினர் எஸ்.எச் அஸ்லம் அவர்களை நேரில் சந்தித்து வரவேற்று மகிழ்ந்தனர். மேலும் அதிரை பேரூராட்சி தலைவர் பணியின் போது ஆற்றிய சேவைகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

சந்திப்பு குறித்து முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் கூறியது: 
தொழில் நிமித்தமாக ஜப்பான் வந்துள்ளேன். இங்குள்ள அதிரை சகோதரர்களை சந்தித்து கலந்துரையாடல் செய்தேன், என் மீது அன்பு பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் அனைவரின் உடல் ஆரோக்கியம், பர்கத் ஆகியவற்றிற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்தேன்' என்றார்.
 

2 comments:

  1. யார் இவர் எதற்காக வரவேற்பு:
    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிராம்பட்டினம் மிலாரிக்காடு பகுதி களில் இருக்கும் குடிநீர் ஆழ்குழாய் களில் அதிரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நன் நோக்கத்தில் வருங்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு வராமல் இருக்க ஆற்று நீரை அதிரை குழங்களுக்கு கொண்டுவந்த பெருமை இவரைசாரும்.
    இதைப்போல சமூக ஆர்வலர்கள் இரோடு இரவும் பகலும் பாராமல் குழங்களுக்கு தண்ணீர் கொண்டுவந்தது இவரின் பொருப்பு காலத்தில்தான், அதற்க்கு ஒருவேளை நன்றி சொல்கின்றார்க்லொ, என்னமோ
    வாழ்த்துக்கள் ஜப்பான் நண்பர்களே.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.