அதிரை அருகே நடைபெற்ற கிரிக்கெட் தொடர் போட்டியில் அதிராம்பட்டினம் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள முதல்சேரி எஸ்.பி. ஆர் மெம்ரியல் 5 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த மே.10 ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் (WCC), பட்டுக்கோட்டை உட்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடியது.
தொடரின் இறுதிப் போட்டி நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் அணி மற்றும் முதல்சேரி ஆகிய அணிகள் மோதியது. இதில் அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டதை தட்டிச்சென்றது. இந்த அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரொக்கம் ரூ. 8008 பரிசாக வழங்கப்பட்டது.
வெற்றிக்கு முதலில் வாழ்த்துக்கள்!
ReplyDeleteகுறைந்தபட்சம் பேன்ட் டி-சர்ட் போட்டிருந்தால் தான் ஒரு கெத்தான கிரிக்கெட் டீமாக தெரியும், இல்லே விளையாடியதே இப்படித்தானா?
சாட்சாத் பாப்பம்பட்டி அணி லுக்!