.

Pages

Tuesday, May 16, 2017

ஏரி, குளங்களில் இலவச மண் எடுக்க பட்டுக்கோட்டையில் சிறப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு !

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்களில் விவசாயம் / வீட்டு உபயோகம் / மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டிற்கு வண்டல் மண் / சவுடு மண் /களி மண் போன்ற கனிமங்களை இலவசமாக எடுப்பதற்கு அனுமதி வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று (16.05.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம் ஆகியவற்றிலிருந்து விவசாயம் / வீட்டு உபயோகம் / மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டிற்கு வண்டல் மண் / சவுடு மண் / களி மண் போன்ற  கனிமங்களை இலவசமாக எடுப்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்கள். இதற்கான சிறப்பு முகாம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பூதலூர் ஆகிய ஐந்து வட்டங்களில் 10.05.2017 முதல் நடைபெற்று வருகின்றது.

இன்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மனு செய்ததை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

மேலும், ஐந்து வட்டங்களில் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி ஏரி, குளங்களை தூர் வாருவதோடு, விவசாயிகள், மண்பாண்ட செய்பவர்கள் ஆகியோர் தங்களுக்கு தேவையான வண்டல் மண்களையும், களி மண்களையும் இலவசமாக எடுத்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் கேட்டுக் கொண்டார்.

இவ்வாய்வின் போது பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், வருவாய் கோட்டாட்சியர் மா.கோவிந்தராஜ், வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.