.

Pages

Tuesday, May 16, 2017

சவூதி மருத்துவமனையில் பணியாற்ற 150 ஆண்/பெண் செவிலியர்கள் தேவை !

அதிரை நியூஸ்: மே 16
சவூதி அரேபியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹீமோடயாலிஸிஸ் பிரிவில் பணியாற்ற 150 ஆண் / பெண் செவிலியர்கள் தேவை.

இதுகுறித்து வேலைவாய்ப்பு நிர்வாக இயக்குனர் டாக்டர் என். சுப்பையன் இ.ஆ.ப வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பது:
சவூதி அரேபியாவில் உள்ள டையாவரம் தனியார் மருத்துவமனைக்கு பிஎஸ்ஸி/ டிப்ளோமா தேர்ச்சியுடன் ஹீமோடயாலிஸிஸ் பிரிவில் தொடர்ந்து 2 வருட பணி அனுபவம் பெற்ற 150 ஆண் / பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

தேர்வு செய்யப்படும் செவிலியர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ 55 ஆயிரம் மாத ஊதியத்துடன், இலவச இருப்பிடம், விமான டிக்கெட், உணவு, மருத்துவக் காப்பீடு ஆகியன இலவசமாக வழங்கப்படும்.

நேர்முகத்தேர்வு சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் 21.05.2017, 22.05.2017 ஆகிய நாட்களிலும், பெங்களூரில் இன்பேண்டரி சாலையில் உள்ள மோனார்க் லக்சர் என்ற ஓட்டலில் 23.05.2017, 24.05.2017 ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல் நடைபெறும்.

விருப்பமும், தகுதியும் உள்ள ஹிமோடயாலிசிஸ் செவிலியர்கள் 19.05.2017க்குள் omceg049@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு omcmanpower.com என்ற வலைதளத்திலும், 044-22505886 / 22502267 / 22500417 / 8220634389 ஆகிய தொலைப்பேசி எண்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.