.

Pages

Tuesday, May 16, 2017

அபுதாபியில் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களில் ஈடுபட்ட 25 பேருக்கு நூதன தண்டனை !

அதிரை நியூஸ்: மே 16
அமீரகத்தில் தற்போது பல்வேறு சிறுகுற்றங்களுக்கு சிறை மற்றும் அபராதங்கள் விதிக்கப்படுவதற்கு பதிலாக தெருக்கூட்டுதல், முக்கிய இடங்களை சுத்தம் செய்தல் போன்ற சமூக சேவைகள் தண்டனையாக வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சமூகத்திற்கும் பயன், தண்டனை பெற்றவரும் அதனை பார்ப்பவர்களும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதிலிருந்தும் தங்களை தற்காத்துக் கொள்வர்.

அபுதாபியில் போக்குவரத்து சம்பந்தப்பட்ட சில குற்றங்களில் ஈடுபட்டோர், பொறுப்பற்ற முறையில் வாகனத்தை ஓட்டியவர்கள், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்களை ஓட்டியோர், சாலைகளில் வாகன ஸ்டண்ட்களை நிகழ்த்தியவர்கள், ரேஸ்களில் ஈடுபட்டோர் மற்றும் விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு அவ்விடத்திலிருந்து நிற்காமல் தப்பித்துச் சென்றோர் என 25 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் சாலைகள், பள்ளிவாசல்கள், நூலகங்கள், கடற்கரைகள், மக்கள் கூடம் இடங்கள், மாற்றுத்திறனாளி மையங்கள், பூங்காக்கள் போன்ற பல இடங்களை சுத்தம் செய்ய வேண்டும் மறுப்போர் 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் அபராதங்களை செலுத்த நேரிடும்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.