.

Pages

Tuesday, May 16, 2017

சவூதியில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளவர்கள் பற்றிய தகவலுக்கு 50,000 ரியால் பரிசு !

அதிரை நியூஸ்: மே 16
சவுதியில் 90 நாள் பொதுமன்னிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து ஏராளமானோர் வெளியேறிவருகின்றனர். அதேபோல் பல ஸ்பான்ஸர்களும், நிறுவனங்களும் தங்களிடம் சட்டத்திற்கு புறம்பாக வேலைபார்க்கும் தொழிலாளிகளை தக்கவைப்பதற்கு தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது மன்னிப்பு காலத்திற்குப் பின்னும் சட்டத்திற்கு புறம்பாக வேலை வழங்குபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும், அதேபோல் சட்டத்திற்கு புறம்பாக நாட்டில் தங்கியுள்ள தொழிலாளர்கள் பற்றி தகவல் தருபவர்களுக்கு 50,000 ரியால் வரை பரிசுகள் வழங்கப்படும் என்றும், சட்டபூர்வமற்ற தொழிலாளர்களிடமிருந்து 15,000 ரியால் முதல் 100,000 ரியால்கள் வரை அபராதமும் வசூலிக்கப்படுமென்றும் சவுதி அரேபியாவின் பாதுகாப்புத் துறை அதிகாரி ஜமான் பின் அஹமது அல் காம்தி அவர்கள் இதனை உயர் அதிகாரிகள், பழங்குடியினர், கல்வித்துறையினர், பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அல் பஹாவில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.