அதிராம்பட்டினம், ஜூன் -09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்
கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் நீடித்து பெய்த மழையால் இப்பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
அதிராம்பட்டினத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை அதிகாலை முதல் வானம் மேகம் மூட்டத்துடன் சூழ்ந்து காணப்பட்டன. அதிகாலையில் சிறிது நேரம் தூறல் மழை பெய்தது.
புதன்கிழமை மாலை 4.30 மணி நேர நிலவரப்படி அதிரையில் 23.90 மி.மீ மழை பதிவாகியது. பட்டுக்கோட்டையில் 6.40 மி.மீ, பேராவூரணி 7 மி.மீ, மதுக்கூரில் 5.40 மி.மீ மழை பதிவாகி உள்ளது. வானம் மேகக் கூட்டங்களால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளித்தன. லேசான குளிர்ந்த காற்றும் வீசி வந்தது.
மழையில் நனைந்த பள்ளி மாணவர்கள்:
கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் புதன்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. முதல் நாள் பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் மாலையில் பள்ளி நேரம் முடிந்தவுடன் மழையில் நனைந்தவாறு வீடு திரும்பினர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்
கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் நீடித்து பெய்த மழையால் இப்பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
அதிராம்பட்டினத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை அதிகாலை முதல் வானம் மேகம் மூட்டத்துடன் சூழ்ந்து காணப்பட்டன. அதிகாலையில் சிறிது நேரம் தூறல் மழை பெய்தது.
புதன்கிழமை மாலை 4.30 மணி நேர நிலவரப்படி அதிரையில் 23.90 மி.மீ மழை பதிவாகியது. பட்டுக்கோட்டையில் 6.40 மி.மீ, பேராவூரணி 7 மி.மீ, மதுக்கூரில் 5.40 மி.மீ மழை பதிவாகி உள்ளது. வானம் மேகக் கூட்டங்களால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளித்தன. லேசான குளிர்ந்த காற்றும் வீசி வந்தது.
மழையில் நனைந்த பள்ளி மாணவர்கள்:
கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் புதன்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. முதல் நாள் பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் மாலையில் பள்ளி நேரம் முடிந்தவுடன் மழையில் நனைந்தவாறு வீடு திரும்பினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.