.

Pages

Tuesday, June 6, 2017

'விதைகள்' அமைப்பின் சார்பில் தீ விபத்து நிவாரணம் ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூன் 05
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
விதைகள் அமைப்பின் சார்பில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 40 கட்டில்கள், ஆடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் திங்கட்கிழமை இரவு வழங்கப்பட்டது.

கடந்த மே 29ந் தேதி அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் அடுத்தடுத்து உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியது. இதன் சேத மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.

இந்நிலையில், விதைகள் அமைப்பினர் தீ விபத்து பகுதிகளை திங்கட்கிழமை இரவு நேரில் பார்வையிட்டு, பாதிப்படைந்த குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இதில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 40 கட்டில்கள், ஆடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.

இதுகுறித்து 'விதைகள்' அமைப்பினர் கூறியது;
'தகவலறிந்த நாங்கள் கரையூர்தெரு கிராம தீ விபத்து பகுதிகளை பார்வையிட்டோம். அப்போது தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் நிவாரணப்பொருட்களை வழங்கி வந்தன.
பாதிப்படைந்த குடும்பங்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பில் உதவ வேண்டும் என எண்ணினோம், அதன்படி, தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 40 கட்டில்கள், ஆடைகள் வழங்கினோம். நிவாரணப் பொருட்களை விநியோகிக்க உதவிய இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துக்குமரன் மற்றும் விதைகள் அமைப்பினர், கலாம் அமைப்பினர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்' என்றனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.