அதிரை நியூஸ்: ஜூன் 09
சவுதி, அமீரகம், பஹ்ரைன், எகிப்து உள்ளிட்ட சில நாடுகள் சக அரபு நாடான கத்தாருடன் தூதரக உறவுகள் உட்பட அனைத்து உறவுகளையும் தடாலடியாக முறித்துக் கொண்டதை தொடர்ந்து விமானப் போக்குவரத்து கடுமையாக முடங்கியுள்ளதுடன் அன்றாட வாழ்விலும் ஒருவித பதட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில், உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் பல்வேறு வதந்திகளும் கத்தாருக்குள் சகட்டுமேனிக்கு வலம் வரும் நிலையில் இந்திய தூதரகம் கத்தார்வாழ் இந்தியர்களுக்கு விளக்கமளித்துள்ளது.
இந்திய தூதரகம் கத்தார் நிலவரத்தை கூர்ந்து கண்காணித்து வருவதுடன் கத்தார் அரசுடனும் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன், கத்தார் அரசு போதிய மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளதால் உணவு பற்றாக்குளை ஏற்படாது என்றும் விளக்கமளித்துள்ளது.
எந்த செய்தி கிடைத்தாலும் அதை ஆராயாமல் உடனடியாக நம்ப வேண்டாம் என்றும், விமான போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்திற்கொண்டு இந்தியர்கள் தங்களுடைய பயணச்சீட்டுக்களை மறுஉறுதி அல்லது மாற்றி பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
சவுதி, அமீரகம், பஹ்ரைன், எகிப்து உள்ளிட்ட சில நாடுகள் சக அரபு நாடான கத்தாருடன் தூதரக உறவுகள் உட்பட அனைத்து உறவுகளையும் தடாலடியாக முறித்துக் கொண்டதை தொடர்ந்து விமானப் போக்குவரத்து கடுமையாக முடங்கியுள்ளதுடன் அன்றாட வாழ்விலும் ஒருவித பதட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில், உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் பல்வேறு வதந்திகளும் கத்தாருக்குள் சகட்டுமேனிக்கு வலம் வரும் நிலையில் இந்திய தூதரகம் கத்தார்வாழ் இந்தியர்களுக்கு விளக்கமளித்துள்ளது.
இந்திய தூதரகம் கத்தார் நிலவரத்தை கூர்ந்து கண்காணித்து வருவதுடன் கத்தார் அரசுடனும் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன், கத்தார் அரசு போதிய மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளதால் உணவு பற்றாக்குளை ஏற்படாது என்றும் விளக்கமளித்துள்ளது.
எந்த செய்தி கிடைத்தாலும் அதை ஆராயாமல் உடனடியாக நம்ப வேண்டாம் என்றும், விமான போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்திற்கொண்டு இந்தியர்கள் தங்களுடைய பயணச்சீட்டுக்களை மறுஉறுதி அல்லது மாற்றி பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.