.

Pages

Monday, March 12, 2018

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 23 பேருக்கு நலத்திட்ட உதவிகள் (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (12.03.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 361 மனுக்களை  பொது மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம்  நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.17,720 மதிப்பிலான நடைபயிற்சி சாதனம், மூன்று சக்கர வண்டி மற்றும் ஊன்றுகோல் ஆகிய உபகரணங்களும், மாவட்ட வருவாய் அலகில் பணியிடைக் காலத்தில் இறந்தவர்களது வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 15 நபர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி நியமன ஆணையினையும், 2 நபர்களுக்கு அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணையினையும், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராலசம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.