.

Pages

Thursday, March 1, 2018

தஞ்சை மாவட்டத்தில் 30,280 மாணவர்கள் +2 அரசு பொதுத் தேர்வு எழுதினர் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொதுத் தேர்வு இன்று 01.03.2018 தொடங்கப்பட்டுள்ளதை  ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொது தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் 29,502 பள்ளி மாணவ மாணவியர்கள் 95 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இதில் 13,267 மாணவர்களும், 16,235 மாணவியர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

தனி தேர்வர்களுக்கு  மூன்று மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 778 தனி தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.  மொத்தம் நமது மாவட்டத்தில் 30,280 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். 86 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடல் ஊனமுற்றோர், கண் பார்வையேற்றார். காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர், டிஸ்லெக்சியா மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கியும் சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் 95 தேர்வு மையங்களில் 2668 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் முழு தேர்ச்சி பெற வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெறவும், சிறந்த மாணவர்களாக வர வேண்டும். வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.