.

Pages

Thursday, March 1, 2018

பட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் வழித்தடத்தில் அதிவேக சோதனை ஓட்டம்!

பட்டுக்கோட்டை, மார்ச்.01
காரைக்குடி - திருவாரூர் இடையேயான, அகல ரயில் பாதை பணி கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் முடிந்துள்ளதை அடுத்து. இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயிலைப் பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ மனோகரன் கலந்துகொண்டு இந்த வழித்தடத்தில் ஆய்வை மேற்கொண்டார். இதில்,  திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உதயகுமார்ரெட்டி, சுதாகர் ராவ் உள்பட ரயில்வே அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.