ஒரு காலத்தில் குதிரைகளில் கம்பீரமாக சவாரி செய்வதும், குதிரை வண்டிகளில் குதுகலத்துடன் பயணிப்பதும் அதிகமாகக் காணப்பட்டது. ஆனால், தற்போது குதிரைகளையும், வண்டிகளையும் காண்பது அரிதாகிவிட்டது. ஆனாலும், குதிரையில் சவாரி செய்வதிலும், குதிரை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்ட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அழிந்து வரும் குதிரை இனங்களை பாதுகாக்கவும், குதிரை இனங்கள் வளர்ப்பு குறித்து பொதுமக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த முகமது சரீப் (33), சதாம் உசேன் (27), முகமது அபூபக்கர் (32), அபுதாஹிர் (31) ஆகிய 4 பட்டதாரி இளைஞர்கள்.
தஞ்சாவூர் மாவட்டதில், முதன் முதலாக, அதிராம்பட்டினத்தில் அரசு அங்கீகாரத்துடன் பண்ணை அமைத்து குதிரைகள் வளர்த்து வருகின்றனர். பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து, இங்கு வளர்க்கப்படுகிறது. இதில், அக்லன் (15 மாதங்கள்), பதல் விராத் (6 ஆண்டுகள்), சித்தார்த் (19 மாதங்கள்) ஆகிய பெயர்களைக்கொண்ட 3 ஆண் குதிரைகள், ஹீரா (33 மாதங்கள்), ஜஹ்ரா (12), மரியம் (3-1/2 ஆண்டுகள்), அஸ்த்ரா (10 மாதங்கள்), சேட்டக் (7 ஆண்டுகள்) ஆகிய பெயரைக்கொண்ட 5 பெண் குதிரைகள் உள்ளன. இக்குதிரைகளை இப்பகுதிச் சிறுவர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஏ.ஆர் ஸ்டெட் பண்ணையின் நிறுவனர்களில் ஒருவரான முகமது சரீப் கூறியது;
சிறு வயது முதல் எனக்கு குதிரை என்றால் கொள்ளைப்பிரியம். திருமணம், திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்காக எங்கள் பகுதிகளில் வலம்வரும் குதிரைகளை நண்பர்களுடன் சென்று ஆர்வமுடன் ரசித்து பார்ப்பது உண்டு. நாளடைவில் குதிரைகளை நேசிப்பவர்களாக மாறினோம். பின்னர், குதிரைகள் வளர்ப்பு குறித்து பயிற்சிகளை முறையாகக் கற்றறிந்தோம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சந்தைகளுக்கு சென்று குதிரைகள் பற்றிய பல நுணுக்கங்களை குதிரை ஆர்வலர்களிடமிருந்து தெரிந்துகொண்டோம். இதன்பின்னர், எங்களது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் புதிதாகப் குதிரைப் பண்ணையை அமைத்துள்ளோம். மாவட்டத்திலேயே எங்களது நிறுவன பண்ணைதான் முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் குதிரை இனங்களை பாதுகாக்கவும், குதிரை இனங்கள் வளர்ப்பு குறித்து பொதுமக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் எங்களது பிராதான நோக்கம்.
எங்களது பண்ணையில் தற்போது மொத்தம் 8 குதிரைகள் உள்ளன. இதில், 'மார்வாரி' ரக குதிரை பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரத்தியோகமாக தருவிக்கப்பட்டவை. இதன் பூர்விகம், ராஜஸ்தான் மாநிலம். அரபியக் குதிரைகளின் வழித்தோன்றல். இந்த ரக குதிரைகள் பண்டைய காலங்களில் நடந்த போர்களில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய வல்லமை பெற்றது.
தினந்தோறும் குதிரைகளுக்கு காலை 7 மணி, மதியம் 1 மணி, மாலை 6 மணி ஆகிய 3 வேளைகளில் உணவு வழங்கப்படுகிறது. கோதுமை தவிடு, பசும்பால், கொள்ளு, கொண்டைக்கடலை, சோளம்தட்டு, பச்சை நிற புள் ஆகியவற்றை விரும்பி உண்ணும். குதிரைகளில் படிந்துகாணப்படும் புழுதிகள், அசுத்தங்களை காட்டன் துணிகளைக்கொண்டு தூய்மைப்படுத்துவோம். கால் குழம்புகளை சுத்தம் செய்து, குளிக்க வைப்போம்.
குதிரைகளுக்கு தினந்தோறும் 1 மணிநேர உடற்பயிற்சி அளிக்கப்படும். இதில், குதிரையின் வயிறு பெருக்காமல் இருக்க அருகில் உள்ள மைதானங்களில் குதிரைகளை ஓட விடுவோம். மாதந்தோறும், கால்நடை மருத்துவர் மூலம் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த பிப். 9,10,11 ஆகிய தேதிகளில் பொள்ளாச்சி மாவட்டம், சமத்தூர் 'வானவராயர் பவுண்டேஷன்' சார்பில் கொங்கு நாட்டு கால்நடைத் திருவிழாவில், எங்கள் பண்ணை குதிரைகள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட குதிரைகள் போட்டிகளில் கலந்துகொண்டன. இதில், குதிரைகளின் உயரம், பராமரிப்பு, வயதுக்கேற்ப தரம் பிரிக்கப்பட்டதில், எங்களது பெண் குதிரை ஹீரா, பல் பிரிவில் முதல் பரிசும், ஆண் குதிரை அக்லன், பால் பல் பிரிவில் 2 ஆம் பரிசும் பெற்று சாதனை படைத்தது.
எங்கள் பண்ணையில், குதிரை வளர்ப்பு பற்றிய ஆலோசனை, குதிரை வளர்ப்பு பயிற்சி, குதிரை ஏற்றம், குதிரைகள் பராமரிப்பு, சினைப் பிடித்தல், இனப்பெருக்கம், விற்பனை ஆகியவற்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
அழிந்து வரும் குதிரை இனத்தைக் காப்பாற்ற குதிரைகள் பயன்பாட்டினை அதிகரிக்க வேண்டும். இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், குதிரைகள் தொடர்புடைய உயரம் தாண்டுதல் (show jumping), டென்ட் பேக்கிங் (Tent pegging game), போலோ (polo game), ஹார்ஸ் என்டுரன்ஸ் ( Horse Endurance) போன்ற விளையாட்டுப் போட்டிகளை அரசு ஏற்று நடத்த வேண்டும். இதுகுறித்து கல்லூரி, பள்ளி மாணவர்களிடேயே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 8838469083
சந்திப்பு: அபூ அஜீம்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.