அதிரை நியூஸ்: மார்ச் 11
பொதுவாக முதிர்ச்சியின்மை அல்லது கூடா நட்பு ஆகியவைகளின் காரணத்தால் எடுக்கப்படும் முடிவுகள் அதாளப் பாதாளத்தில் தள்ளிவிடும். இதையே நம் தமிழ் மண்ணில் ஒன்னு சுய புத்தி இருக்கனும் அல்லது சொல் புத்தி இருக்கனும் என நகரீகமாக சொல்வார்கள்.
கடந்த வருடம் சவுதியில் உடனிருக்கும் மனைவி, குழந்தை, பெற்றோர் போன்ற உறவுகளை தன்னோடு ரெஸிடென்ஷியல் விசாக்களில் வைத்துக் கொள்ள லெவி எனப்படும் வரி மாதந்தோறும் கட்டும் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் கம்பெனிகள் மீது வரிகள் விதிக்கப்பட்டன. மேலும், 2018 ஜனவரி முதல் 5 சதவிகித வாட் வரியும் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் தண்ணீர், மின்சாரம், சில்லறை பெட்ரோல் விலை என சகட்டுமேனிக்கு உயர்த்தப்பட்டது.
மேற்காணும் நடவடிக்கைகளால் பல வெளிநாட்டினர் தாக்குப்பிடிக்க இயலாதோர் வேலையை இழந்து அல்லது உதறிவிட்டு வெளியேறினர். குழந்தை பள்ளிக்கூடத்தில் படிக்கும் நிலையில் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டவர்கள் மார்ச் மாதத்துடன் இவ்வருட கல்வியாண்டு நிறைவடைதையொட்டி பெருமளவில் வெளியேறவுள்ளதால் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் சரிபாதி மாணவர்களை இழக்க நேரிடலாம் என அஞ்சப்படுகிறது. இந்த வருமான இழப்பை ஈடுகட்ட கட்டணத்தையும் உயர்த்த முடியாமல் பள்ளிக்கூட நிர்வாகங்கள் தவிக்கின்றன, உயர்த்தினால் எஞ்சியோரும் செல்லக்கூடும்.
இன்னொருபுறம் குடும்பமாய் வாழ்ந்தவர்களில் பலரும் மின்னல் வேகத்தில் வீடுகளை காலி செய்து வருகின்றன. இதனால் ரியல் எஸ்டேட் துறையும் பலத்த அடிவாங்கி வருகிறது. தண்ணீர் மற்றும் மின்சார கட்டணங்களை வாடகைக்கு குடியிருப்போரே செலுத்துவதாக ஒப்புக் கொண்டால் வாடகையில் கணிசமாக குறைப்பதாக வீட்டின் உரிமையாளர்கள் சலுகை வழங்க முன்வந்துள்ளனர். அதேவேளை சவுதியர்கள் வாடகை வீடுகள் குடியிருப்பதை விட அரசு கட்டித்தரும் வீடுகளுக்கு செல்வதையே விரும்புவதால் இன்னும் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இன்னொருபுறம் மேலைநாடுகளிலிருந்து ஆயுதம் வாங்கிக் குவிக்கும் நடவடிக்கைகளும், சொகுசு நகரங்கள் கட்டும் திட்டங்களும், மகாராணிக்களைப் போல் வீட்டில் வைத்து போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய பெண்களும் வீட்டை விட்டு வெளியேறி ஆண்களுடன் போட்டியிட்டு சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையும் மேற்கத்திய நாகரீகத்தின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
பொதுவாக முதிர்ச்சியின்மை அல்லது கூடா நட்பு ஆகியவைகளின் காரணத்தால் எடுக்கப்படும் முடிவுகள் அதாளப் பாதாளத்தில் தள்ளிவிடும். இதையே நம் தமிழ் மண்ணில் ஒன்னு சுய புத்தி இருக்கனும் அல்லது சொல் புத்தி இருக்கனும் என நகரீகமாக சொல்வார்கள்.
கடந்த வருடம் சவுதியில் உடனிருக்கும் மனைவி, குழந்தை, பெற்றோர் போன்ற உறவுகளை தன்னோடு ரெஸிடென்ஷியல் விசாக்களில் வைத்துக் கொள்ள லெவி எனப்படும் வரி மாதந்தோறும் கட்டும் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் கம்பெனிகள் மீது வரிகள் விதிக்கப்பட்டன. மேலும், 2018 ஜனவரி முதல் 5 சதவிகித வாட் வரியும் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் தண்ணீர், மின்சாரம், சில்லறை பெட்ரோல் விலை என சகட்டுமேனிக்கு உயர்த்தப்பட்டது.
மேற்காணும் நடவடிக்கைகளால் பல வெளிநாட்டினர் தாக்குப்பிடிக்க இயலாதோர் வேலையை இழந்து அல்லது உதறிவிட்டு வெளியேறினர். குழந்தை பள்ளிக்கூடத்தில் படிக்கும் நிலையில் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டவர்கள் மார்ச் மாதத்துடன் இவ்வருட கல்வியாண்டு நிறைவடைதையொட்டி பெருமளவில் வெளியேறவுள்ளதால் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் சரிபாதி மாணவர்களை இழக்க நேரிடலாம் என அஞ்சப்படுகிறது. இந்த வருமான இழப்பை ஈடுகட்ட கட்டணத்தையும் உயர்த்த முடியாமல் பள்ளிக்கூட நிர்வாகங்கள் தவிக்கின்றன, உயர்த்தினால் எஞ்சியோரும் செல்லக்கூடும்.
இன்னொருபுறம் குடும்பமாய் வாழ்ந்தவர்களில் பலரும் மின்னல் வேகத்தில் வீடுகளை காலி செய்து வருகின்றன. இதனால் ரியல் எஸ்டேட் துறையும் பலத்த அடிவாங்கி வருகிறது. தண்ணீர் மற்றும் மின்சார கட்டணங்களை வாடகைக்கு குடியிருப்போரே செலுத்துவதாக ஒப்புக் கொண்டால் வாடகையில் கணிசமாக குறைப்பதாக வீட்டின் உரிமையாளர்கள் சலுகை வழங்க முன்வந்துள்ளனர். அதேவேளை சவுதியர்கள் வாடகை வீடுகள் குடியிருப்பதை விட அரசு கட்டித்தரும் வீடுகளுக்கு செல்வதையே விரும்புவதால் இன்னும் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இன்னொருபுறம் மேலைநாடுகளிலிருந்து ஆயுதம் வாங்கிக் குவிக்கும் நடவடிக்கைகளும், சொகுசு நகரங்கள் கட்டும் திட்டங்களும், மகாராணிக்களைப் போல் வீட்டில் வைத்து போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய பெண்களும் வீட்டை விட்டு வெளியேறி ஆண்களுடன் போட்டியிட்டு சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையும் மேற்கத்திய நாகரீகத்தின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.