.

Pages

Saturday, March 10, 2018

கர்நாடகா பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் 99 பித்தப்பை கற்கள் அகற்றம்!

அதிரை நியூஸ்: மார்ச் 10
கர்நாடகாவின் துமாகூரு (Tumakuru) பகுதியை சேர்ந்த 45 வயது ஏழைப்பெண் ஒருவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு நிதி உதவி செய்வோர் யாருமில்லாததால் மருத்துவம் செய்ய அனைத்து தனியார் மருத்துவமனைகளும் மறுத்துவிட்ட நிலை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

மருத்துவமனையில் ஸ்கேன் மூலம் பரிசோதிக்கப்பட்ட போது பித்தப்பையில் கல் அடைப்பு ஏற்பட்டுள்ளதுடன் முன்புற வயிற்றுச் சுவரில் வீக்கமும், தொப்புள் குடலிறக்கமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கூடுதல் உபாதைகளாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் இதய நோயும் இருந்துள்ளது.

இந்நிலையில் இவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் 12 மி.மீ அளவுள்ள 3 கற்களையும் மற்ற கற்கள் 4 முதல் 5 மி.மீ வரையும் என மொத்தம் 99 கற்களை அகற்றியதுடன் குடலிறக்கத்திற்கும் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த ஆபரேசன் சுமார் 2 ½ மணிநேரம் நடைபெற்றதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் 2015 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் 51 வயது பெண்மணிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் சுமார் 12,000 பித்தப்பை கற்கள் அகற்றப்பட்டதே சாதனையளவாக திகழ்கின்றது.

Sources: IBT / Financial Express / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.