.

Pages

Saturday, March 10, 2018

நடுத்தெரு - வாய்க்கால் தெரு அரசுப் பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா!

அதிராம்பட்டினம், மார்ச் 10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 25 பேர் ஒரு நாள் கல்வி விழிப்புணர்வு சுற்றுலா சென்று வந்தனர்.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2017-18), மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும், பள்ளி மாணவ, மாணவிகளை ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று, சுற்றுலாத் துறை அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் முக்கியத்துவம், வரலாறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அதிராம்பட்டினம் நடுத்தெரு வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 25 பேர் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகி என்.எம் முகமது ஹனீபா மாணவ, மாணவிகளின் கல்விச் சுற்றுலாவை சனிக்கிழமை காலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஏ.சாகுல் ஹமீது, எம்.ஆர் ஜமால் முகமது, பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி ஆசிரியர் டேவிட் ஆரோக்கியராஜ் தலைமையில், கல்விச்சுற்றுலாவாக மாணவ, மாணவிகள் கல்லணை, தஞ்சாவூர் ராஜாராஜ சோழன் கோவில், சிவகங்கை பூங்கா, மணிமண்டபம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வந்தனர். அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.