.

Pages

Tuesday, January 8, 2019

தஞ்சை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.21ந் தேதி வெளியிடப்படும்: ஆட்சியர் அறிவிப்பு!

இறுதி வாக்காளர் பட்டியல் 21-01-2019 அன்று வெளியிடப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சில வட்டங்களில் கஜா புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்டதாலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், 1-1-2019 அன்று தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளை முடிக்க சிறிது கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து. இந்திய தேர்தல் ஆணையம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணைப்படி. 04-01-2019 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு பதிலாக, 21-01-2019 அன்று வெளியிட அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி. தஞ்சாவூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 21-01-2019 அன்று வெளியிடப்படும் என பொது மக்களுக்கும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இதன் மு்லம் அறிவிக்கப்படுகிறது.

இறுதி வாக்காளர் பட்டியல் 21-1-2019 அன்று வெளியிடப்பட்டதற்கு பின்னர். பொது மக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறும். விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் முகவரி உள்ளிட்ட திருத்தம் செய்ய தவறியவர்கள் 22,01,2019 முதல் அனைத்து வட்டாட்சியர்கள் அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவில் உரிய படிவம் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆதார ஆவணங்களுடன் வழங்கி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை  தெரிவித்துள்ளார்,

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.