.

Pages

Tuesday, January 8, 2019

தஞ்சை மாவட்டத்திற்கு நிவாரணத் தொகை வழங்கிட ரூ.508.34 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழக அரசு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கஜா புயலால் பாதிப்படைந்த பயிர்களுக்கு  நிவாரணத் தொகை வழங்கிட ரூ.508.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலினால் தென்னை, கரும்பு, நெல், மக்காச்சோளம், வாழை, வெற்றிலை, இதர காய்கறி பயிர்கள் மற்றும் மரப்பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. 

தமிழக அரசு தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க, முதற்கட்டமாக ரூ.165 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தற்சமயம் கூடுதலாக ரூ.330.81 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது, ஆக மொத்தம் தென்னை மரங்கள் பாதிப்பிற்கு ரூ.495.82 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

நெல், கரும்பு, மக்காச்சோளம் மற்றும் எண்ணெய்பனை ஆகிய பயிர்களுக்கு நிவாரணத்தொகை ரூ.9.24 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பிற்கு முதற்கட்டமாக ரூ.1.85 கோடி, கூடுதலாக ரூ.1.44 கோடி ஆகமொத்தம் ரூ.3.29 கோடி நிவாணத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பயிர்கள் பாதிப்பிற்கு மொத்தம் ரூ.508.34 கோடி நிவாரணத்தொகை ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.  தென்னை மரங்கள் பாதிப்பிற்கு  இது வரை 7529 விவசாயிகளுக்கு ரூ.51.5 கோடி நிவாரணத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிரான வாழை பயிரிட்டு பாதிக்கப்பட்ட 2792 விவசாயிகளுக்கு ரூ.1.49 கோடி நிவாரணத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் மரப்பயிர்கள் பாதிப்பு தொடர்பான கணக்கெடுப்பு முடிக்கப்படும் கிராமங்களுக்கு நிவாரணத்தொகை விடுவிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.