.

Pages

Tuesday, January 1, 2019

அதிராம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம், ஜன.01
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், காவல் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.கே சம்சுதீன் தலைமை வகித்தார். செயலாளர் இசட். அகமது மன்சூர், பொருளாளர் எஸ். சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியை, அதிராம்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் முருகானந்தம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது, செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம், நான்கு சக்கர வாகனங்களில் ஷீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர்கள் பொன்னியின் செல்வன், செந்தில்குமார், பிரதீப் மற்றும் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.