அதிராம்பட்டினம், ஜன.02
அதிராம்பட்டினம் பகுதியில் பேக்கிங் இயந்திரம் உதவியுடன் ரயில் தண்டவாளத்தை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவடைந்துள்ளது. அதன் எஞ்சிய பகுதியான, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த வழித்தடத்தில், பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம் வழியாக திருத்துறைப்பூண்டி வரையிலான சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில், பேக்கிங் இயந்திரம் மூலம் தண்டவாளத்தின் இருபுறங்களிலும் உள்ள ஜல்லிகளை நெருக்கி பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் தற்போது அதிராம்பட்டினம் பகுதியில் நடந்து வருகிறது.
'பட்டுக்கோட்டை ~ திருத்துறைப்பூண்டி வரையிலான அகல ரயில் பாதை பணிகளை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், கஜா புயலின் காரணமாக ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள சேதப்பகுதிகள் அனைத்தும் துரிதமாக சீர் செய்யப்பட்டு வருதாகவும், தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களின் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், இந்த வழித்தடத்தில் முதல் கட்ட சோதனை ஓட்டத்தை வரும் ஜனவரி மாத நிறைவில் நடத்த இருப்பதாகவும், பின்னர், சிறப்பு ரயிலைப் பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்த இருப்பதாகவும், அப்போது, தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்துவார்' என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தது.
அதிராம்பட்டினம் பகுதியில் பேக்கிங் இயந்திரம் உதவியுடன் ரயில் தண்டவாளத்தை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவடைந்துள்ளது. அதன் எஞ்சிய பகுதியான, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த வழித்தடத்தில், பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம் வழியாக திருத்துறைப்பூண்டி வரையிலான சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில், பேக்கிங் இயந்திரம் மூலம் தண்டவாளத்தின் இருபுறங்களிலும் உள்ள ஜல்லிகளை நெருக்கி பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் தற்போது அதிராம்பட்டினம் பகுதியில் நடந்து வருகிறது.
'பட்டுக்கோட்டை ~ திருத்துறைப்பூண்டி வரையிலான அகல ரயில் பாதை பணிகளை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், கஜா புயலின் காரணமாக ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள சேதப்பகுதிகள் அனைத்தும் துரிதமாக சீர் செய்யப்பட்டு வருதாகவும், தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களின் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், இந்த வழித்தடத்தில் முதல் கட்ட சோதனை ஓட்டத்தை வரும் ஜனவரி மாத நிறைவில் நடத்த இருப்பதாகவும், பின்னர், சிறப்பு ரயிலைப் பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்த இருப்பதாகவும், அப்போது, தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்துவார்' என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.