தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம், பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை ஒன்றியங்களில் கஜா புயல் நிவாரணப் பணிகள் மற்றும் தென்னை சேதம் குறித்த கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (02.01.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பட்டுக்கோட்டை ஒன்றியம், கரம்பயம் ஊராட்சியில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், பேராவூரணி ஒன்றியங்களில் கஜா புயலால் சேதமடைந்த மின் மாற்றிகள் பழுது பார்க்கப்பட்டு, பொருத்தப்படும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துணை மின் நிலையத்தில் கஜா புயலால் சேதமடைந்த மின்மாற்றிகளின் எண்ணிக்கை குறித்தும், தற்போது வரை சீர் செய்யப்பட்டுள்ள விவரங்கள் குறித்தும் மின்சாரத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடித்திடுமாறு உத்தரவிட்டார்.
பின்னர், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கட்டயங்காடு ஊராட்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடு குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட தமிழக அரசின் 27 நிவாரணப்பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகங்களை நேரில் பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் நிவாரணப் பொருட்கள் பெற்றுள்ளனரா எனவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் உதவித் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். அப்போது சிலருக்கு 100 நாள் வேலைக்கான வங்கிக் கணக்கு இருந்தமையால், அவர்களிடம் வேறொரு வங்கிக் கணக்கை பெற்று நிவாரண தொகையினை வரவு வைத்திடுமாறு தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார். அரசின் நிவாரண உதவித் தொகை பெற 100 நாள் வேலை திட்ட வங்கி கணக்குகளை கொடுக்க வேண்டாம் என பொது மக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, செருபாலக்காடு ஊராட்சியில் கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேலாய்வு செய்து முழுவதுமாக சாய்ந்த மரங்கள் மற்றும் கொண்டை சாய்ந்த மரங்களின் எண்ணிக்கை குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அப்பகுதியில் இருந்த தென்னை விவசாயிகளிடம் கஜா புயலுக்கு முன் தேங்காயின் விலை குறித்தும், தற்போது உள்ள விலை குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்தார். செருபாலக்காடு ஊராட்சியில் திரு.மணியன் என்ற விவசாயின் தென்னந்தோப்பில் கஜா புயலால் சாய்ந்த சுமார் 20 வருட தென்னை மரம் மீண்டும் நடவு செய்யப்படுவதை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் விவசாயி மணியன் அவர்களை பாராட்டினார்.
அதனை தொடர்ந்து, நாட்டாணிக்கோட்டை ஊராட்சியில் கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களின் கணக்கெடுப்புகள் குறித்து மேலாய்வு (Super check) மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கணக்கெடுப்பு பதிவுகளை அடங்கல், புல எண் மற்றும் இதர வருவாய்த்துறை ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரி பார்த்தார். தற்போது வரை, பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை குறித்தும், வரவு வைக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை குறித்தும், வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து நிவாரணப் பணியை விரைந்து முடித்திட அனைத்து அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் நெடுஞ்செழியன், துணை இயக்குநர் ஜஸ்டின், வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பட்டுக்கோட்டை ஒன்றியம், கரம்பயம் ஊராட்சியில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், பேராவூரணி ஒன்றியங்களில் கஜா புயலால் சேதமடைந்த மின் மாற்றிகள் பழுது பார்க்கப்பட்டு, பொருத்தப்படும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துணை மின் நிலையத்தில் கஜா புயலால் சேதமடைந்த மின்மாற்றிகளின் எண்ணிக்கை குறித்தும், தற்போது வரை சீர் செய்யப்பட்டுள்ள விவரங்கள் குறித்தும் மின்சாரத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடித்திடுமாறு உத்தரவிட்டார்.
பின்னர், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கட்டயங்காடு ஊராட்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடு குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட தமிழக அரசின் 27 நிவாரணப்பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகங்களை நேரில் பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் நிவாரணப் பொருட்கள் பெற்றுள்ளனரா எனவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் உதவித் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். அப்போது சிலருக்கு 100 நாள் வேலைக்கான வங்கிக் கணக்கு இருந்தமையால், அவர்களிடம் வேறொரு வங்கிக் கணக்கை பெற்று நிவாரண தொகையினை வரவு வைத்திடுமாறு தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார். அரசின் நிவாரண உதவித் தொகை பெற 100 நாள் வேலை திட்ட வங்கி கணக்குகளை கொடுக்க வேண்டாம் என பொது மக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, செருபாலக்காடு ஊராட்சியில் கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேலாய்வு செய்து முழுவதுமாக சாய்ந்த மரங்கள் மற்றும் கொண்டை சாய்ந்த மரங்களின் எண்ணிக்கை குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அப்பகுதியில் இருந்த தென்னை விவசாயிகளிடம் கஜா புயலுக்கு முன் தேங்காயின் விலை குறித்தும், தற்போது உள்ள விலை குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்தார். செருபாலக்காடு ஊராட்சியில் திரு.மணியன் என்ற விவசாயின் தென்னந்தோப்பில் கஜா புயலால் சாய்ந்த சுமார் 20 வருட தென்னை மரம் மீண்டும் நடவு செய்யப்படுவதை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் விவசாயி மணியன் அவர்களை பாராட்டினார்.
அதனை தொடர்ந்து, நாட்டாணிக்கோட்டை ஊராட்சியில் கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களின் கணக்கெடுப்புகள் குறித்து மேலாய்வு (Super check) மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கணக்கெடுப்பு பதிவுகளை அடங்கல், புல எண் மற்றும் இதர வருவாய்த்துறை ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரி பார்த்தார். தற்போது வரை, பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை குறித்தும், வரவு வைக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை குறித்தும், வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து நிவாரணப் பணியை விரைந்து முடித்திட அனைத்து அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் நெடுஞ்செழியன், துணை இயக்குநர் ஜஸ்டின், வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.