.

Pages

Wednesday, January 2, 2019

பொதக்குடியில் நடந்த மின்னொளி கால்பந்து போட்டியில் அதிரை WFC அணி சாம்பியன்!

அதிராம்பட்டினம், ஜன.02
பொதுக்குடி கூல் பிரண்ட்ஸ் சார்பில், 14-வது ஆண்டு மின்னொளி ஐவர் கால்பந்து தொடர் போட்டி பொதக்குடி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (டிச.31) மற்றும் நேற்று (ஜன.1) ஆகிய 2 தினங்கள் நடைபெற்றது.

இதில், அதிராம்பட்டினம், பொதக்குடி, கூத்தாநல்லூர், மன்னார்குடி, அத்திக்கடை, பூதமங்கலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில், பொதக்குடி, அதிராம்பட்டினம் WFC, கூத்தாநல்லூர் ஆகிய அணிகள் அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.

இதையடுத்து, நேற்று (ஜன.1) இரவு நடந்த இறுதி போட்டியில் அதிராம்பட்டினம் WFC, பொதக்குடி கூல் பிரண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. விறு விறுப்பாக நடந்த ஆட்ட முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அதிரை WFC அணி வென்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. முதல் பரிசாக ரூ.6100 வழங்கி அதிரை WFC அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், முதல் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவிய நட்சத்திர வீரர் அன்சர்கானுக்கு ரூ.500 சிறப்பு பரிசு வழங்கப்பட்டன.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.