.

Pages

Saturday, January 5, 2019

பட்டுக்கோட்டை பகுதியில் புயல் நிவாரணப் பணிகள் ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஒன்றியங்களில் கஜா புயல் நிவாரணப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (05.01.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட அண்டமி ஊராட்சி, பட்டுக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட  சூரப்பள்ளம் ஊராட்சி மற்றும் பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட குறிச்சி, மடத்திக்காடு, மதன்பட்டவூர், சாணாக்கரை ஆகிய ஊராட்சிகளில் கஜா புயலால் சேதமடைந்து பாதிக்கப்பட்ட தென்னந்தோப்புகளின் கணக்கெடுப்புகள் முடிவடைந்துள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு மேலாய்வு செய்தார். 

வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் நடவு செய்யும் பணியை மேற்கொள்ளும் விவசாயிகளை பாராட்டிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தென்னை மரங்களை மறு நடவு செய்யும் விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண உதவித்தொகை பெறுவதற்கு 100 நாள் வேலை திட்ட வங்கிக் கணக்கை கொடுக்க வேண்டாம் என தெரிவித்தார்.  மடத்திக்காடு ஆதிதிராவிடர் காலனியில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பெட்டகம் அனைவரும் பெற்றுள்ளனரா எனவும், நிவாரண உதவித்தொகை அனைவருக்கும் கிடைக்கப் பெற்றுள்ளதா என்பது குறித்தும்  கேட்டறிந்தார்.

ஆய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் நெடுஞ்செழியன், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள்  உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.