.

Pages

Saturday, January 5, 2019

கஜா புயலால் சேதமடைந்த அதிரை ~ மகிழங்கோட்டை கிராம இணைப்புச் சாலையை சீரமைக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம், ஜன.05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை வரை செல்லும் ஊராட்சி ஒன்றிய நெடுஞ்சாலை கடந்த 5 ஆண்டுகளாக சீரமைக்காததால் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

இந்த சாலையையொட்டி வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், வழிபாட்டுத்தளங்கள், பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ளதால், பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். எந்நேரமும் போக்குவரத்து அதிகம் மிகுந்த சாலையாக காணப்படுவதால், அவ்வப்போது வாகன விபத்துகளும் நிகழ்கின்றன. அண்மையில் வீசிய கஜா புயலால் இந்த சாலை மேலும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, இந்த சாலையை புதிதாக அமைத்து தர சம்பந்தப்பட்ட பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.