.

Pages

Wednesday, January 2, 2019

பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு (படங்கள்)

பேராவூரணி ஜன.02-
பேராவூரணியில் பேரூராட்சி சார்பில் வியாபாரிகள், பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் 14 வகையான
பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1 முதல் தமிழக அரசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. மேலும் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சி சார்பில், செயல் அலுவலர் மு.பொன்னுசாமி அறிவுறுத்தலின்படி, புதன்கிழமை அன்று தலைமை எழுத்தர் வீ.சிவலிங்கம் தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் பேராவூரணி கடைவீதியில் உணவகங்கள், துணிக்கடை, மளிகைக் கடை, இறைச்சி மற்றும் மீன் விற்பனைக் கடைகள், காய்கறிக்கடை மற்றும் தேநீர் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதோ, பயன்படுத்துவதோ கூடாது என தெரிவிக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்தவும், பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் துணிப்பைகளை கொண்டு வரச் சொல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல்களை கட்ட கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதோ, பயன்படுத்துவதோ குற்றமாகும். அவ்வாறு செய்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

மேலும் தடை செய்யப்பட்ட, பயன்படுத்தக் கூடாத 25 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரிகளிடமிருந்து கேட்டு பெறப்பட்டு, குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.