.

Pages

Thursday, January 3, 2019

ஒரத்தநாட்டில் அரசு அதிகாரிகளைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம் ~ 400 பேர் கைது (படங்கள்)

ஒரத்தநாடு, ஜன.03
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு பள்ளிவாசல் விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்படும் அரசு அதிகாரிகளைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், ஆர்ப்பாட்டம் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் அஸ்லம் பாஷா, மாநில பேச்சாளர் கோவை. செய்யது ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

கஜா புயலினால் சேதமடைந்த பள்ளிவாசல் புனரமைக்கும் பணியை தடுத்து, தொழுகை நடத்த இடையூறாக இருப்பவர்களை கைது செய்யக்கோரியும், ஒருதலைப்பட்சமாக செயல்படும் அரசு அதிகாரிகளை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்ட முடிவில், அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் மதுக்கூர் ஜபருல்லா நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, அதிராம்பட்டினம், மதுக்கூர், பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமுமுகவினர், ஜமாத்தார்கள் உள்ளிட்ட 400 பேரை போலீசார் கைது செய்து ஒரத்தநாடு தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.