.

Pages

Thursday, January 3, 2019

கட்டுமானம் ~ தார்சாலைகள் அமைப்பதற்கான பொருட்களை மாவட்ட தரக்கட்டுப்பாடு ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்யலாம்: ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர் மாவட்டம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் தார்சாலைகள் அமைப்பதற்கான பொருட்களை மாவட்ட தரக்கட்டுப்பாடு ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது : -
தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டின் கீழ் தஞ்சாவூர் - திருச்சி புறவழிச்சாலை மேலவஸ்தாசாவடியில் இயங்கும் தரக் கட்டுப்பாடு ஆய்வுக் கூடத்தில் கட்டுமானப் பொருட்கள் மற்றும் தார்சாலைகள் அமைப்பதற்கான பொருட்கள் பரிசோதனை செய்யப்படுகிறது. தரக் கட்டுப்பாடு ஆய்வுக் கூடத்தில் தார் அளவு பரிசோதனை ரூ.750க்கும், கான்கிரீட் தாங்குதிறன் பரிசோதனை ரூ.400க்கும், கலவை தாங்குதிறன் பரிசோதனை ரூ.300க்கும், செங்கல் தாங்குதிறன் மற்றும் நீர் உறிஞ்சு பரிசோதனை ரூ.200க்கும், ஜல்லி தாங்குதிறன்  பரிசோதனை ரூ.1000க்கும், ப்ராக்டர் அடர்த்தி பரிசோதனை ரூ.1000க்கும் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் இதர அரசு துறை ஒப்பந்ததாரர்களும், தனியார் ஒப்பந்தாரர்களும் தரக்கட்டுப்பட்டு ஆய்வகத்தில் கட்டுமானம் மற்றும் தார் சாலை பொருட்களை பரிசோதனை செய்து பயன் பெறலாம்.  மேற்படி பரிசோதனை மேற்கொள்வதற்கான தொகையினை Project Director, DRDA, Thanjavur என்ற பெயரில் வரைவோலை எடுத்து செலுத்த வேண்டும்.

மேலும், விவரங்களை தெரிந்து கொள்ள 7402607409 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.