.

Pages

Saturday, June 20, 2020

1 லிட்டர் பெட்ரோல் ரூ.30, டீசல் ரூ.25 க்கு வழங்கக் கோரி அதிரையில் ஆர்ப்பாட்டம்!

அதிராம்பட்டினம், ஜூன் 20
இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் சார்பில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுகளை ரத்து செய்யக்கோரியும், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30 க்கும், டீசல் ரூ.25 க்கும் விற்பனை செய்யும் வகையில் எரிபொருள் விற்பனை கொள்கையை திருத்தியமைக்கக் கோரியும் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பட்டம் இன்று (20-06-2020) சனிக்கிழமை நடத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என். காளிதாஸ் தலைமை வகித்தார். இதில், ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், ஏ.எச் பசீர் அகமது, ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.சுப்பிரமணியம், எம்.முகமது இக்பால், எஸ். மீராஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுகளை ரத்து செய்யக்கோரியும், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.30 க்கும், டீசல் ரூ.25 க்கும் விற்பனை செய்யும் வகையில் எரிபொருள் விற்பனை கொள்கையை திருத்தியமைக்க வலியுறுத்தி சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.