.

Pages

Thursday, June 25, 2020

அதிராம்பட்டினத்தில் ஜூன் 27 ந் தேதி ஜமாபந்தி!

அதிரை நியூஸ்: ஜூன் 25
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கிராமக்கணக்குகளை ஒவ்வொரு வருடமும் அந்தந்த பசலியில் (வருடம்) இறுதி மாதத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோன்று, நடப்பு பசலி வருடத்திற்கு (1429) தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழ்க்கண்ட அலுவலர்களால் 26.06.2020 முதல் 30.06.2020 வரை 1429ம் பசலிக்கான கிராமக்கணக்குகள் தணிக்கை செய்யப்படவுள்ளது.
1429ஆம் பசலி ஆண்டு வருவாய்த்தீர்வாய (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால்  திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.06.2020 அன்று நடுக்காவேரி உள்வட்டத்திற்கும், 27.06.2020 அன்று கண்டியூர் உள்வட்டத்திற்கும், 29.06.2020 அன்று திருவையாறு உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலர் தஞ்சாவூர் அவர்களால் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.06.2020 அன்று காவாலிப்பட்டி மற்றும் தொண்டராம்பட்டு உள்வட்டங்களுக்கும், 27.06.2020 அன்று உளுர் மற்றும் ஒரத்தநாடு உள்வட்டங்களுக்கும், 29.06.2020 அன்று ஈச்சங்கோட்டை மற்றும் சில்லத்தூர் உள்வட்டங்களுக்கும், 30.06.2020 அன்று திருமங்கலக்கோட்டை மற்றும் தெக்கூர் உள்வட்டங்களுக்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட சாலைத்திட்டம் (ஊமுஐஊP), கும்பகோணம்; அவர்களால் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.06.2020 அன்று பந்தநல்லூர்; உள்வட்டத்திற்கும். 27.06.2020 அன்று திருப்பனந்தாள் உள்வட்டத்திற்கும் 29.06.2020 அன்று கதிராமங்கலம் உள்வட்டத்திற்கும் 30.06.2020 அன்று ஆடுதுறை மற்றும் திருவிடைமருதூர் உள்வட்டங்களுக்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

சார் ஆட்சியர், பட்டுக்கோட்டை அவர்களால் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.06.2020 அன்று பெருமகளுர், உள்வட்டத்திற்கும், 27.06.2020 அன்று குருவிக்கரம்பை உள்வட்டத்திற்கும் 29.06.2020 அன்று ஆவணம்; உள்வட்டத்திற்கும் 30.06.2020 அன்று பேராவூரணி உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

வருவாய் கோட்ட அலுவலர் தஞ்சாவூர் அவர்களால் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.06.2020 அன்று அகரப்பேட்டை உள்வட்டத்திற்கும், 27.06.2020 அன்று திருக்காட்டுப்பள்ளி உள்வட்டத்திற்கும் 29.06.2020 அன்று பூதலூர் உள்வட்டத்திற்கும் 30.06.2020 அன்று செங்கிப்பட்டி உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

வருவாய் கோட்ட அலுவலர் (பொறுப்பு), கும்பகோணம் அவர்களால் கும்பகோணம்; வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.06.2020 அன்று தேவனாஞ்சேரி உள்வட்டத்திற்கும், 27.06.2020 அன்று முருக்கங்குடி உள்வட்டத்திற்கும் 29.06.2020 அன்று நாச்சியார்கோவில்; உள்வட்டத்திற்கும் 30.06.2020 அன்று சோழன்மாளிகை மற்றும் கும்பகோணம் உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

உதவி ஆணையர் (கலால்), தஞ்சாவூர் அவர்களால் தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.06.2020 அன்று பெரம்ப10ர் உள்வட்டத்திற்கும், 27.06.2020 அன்று வல்லம் உள்வட்டத்திற்கும் 29.06.2020 அன்று தஞ்சாவூர் உள்வட்டத்திற்கும் 30.06.2020 அன்று இராமாபுரம் மற்றும் நாஞ்சிக்கோட்டை உள்வட்டங்களுக்கும்; வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தஞ்சாவூர் அவர்களால் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.06.2020 அன்று அய்யம்பேட்டை உள்வட்டத்திற்கும், 27.06.2020 அன்று கபிஸ்தலம் உள்வட்டத்திற்கும் 29.06.2020 அன்று பாபநாசம் மற்றும் மெலட்டூர் உள்வட்டங்களுக்கும் 30.06.2020 அன்று சாலியமங்கலம் மற்றும் அம்மாப்பேட்டை உள்வட்டங்களுக்கும்; வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

தனித்துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) தஞ்சாவூர் அவர்களால் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.06.2020 அன்று குறிச்சி மற்றும் திருச்சிற்றம்பலம் உள்வட்டங்களுக்கும் 27.06.2020 அன்று அதிராம்பட்டினம் மற்றும் தம்பிக்கோட்டை உள்வட்டங்களுக்கும் 29.06.2020 அன்று நம்பிவயல், பெரியக்கோட்டை மற்றும் துவரங்குறிச்சி உள்வட்டங்களுக்கும் 30.06.2020 அன்று மதுக்கூர். ஆண்டிக்காடு மற்றும் பட்டுக்கோட்டை உள்வட்டங்களுக்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

வருவாய்த்தீர்வாயம் குறிப்பிட்ட நாட்களில் காலை 10.00 மணிக்கு அந்தந்த வட்டாட்சியர் அலவலகத்தில் துவங்கி நடைபெறும். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு-144ன் கீழ் ஊரடங்கு உத்தரவு 30.06.2020 நள்ளிரவு 12.00 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு-144ன்படி மாவட்டத்தில் பொது இடங்களில் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், பொதுமக்கள் கூட்டத்திற்கும் தடை ஆணை விதிக்கப்பட்டுள்ளது. 30.06.2020 நள்ளிரவு 12.00 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் வருவாய்த்தீர்வாயம் முடிந்தவுடன் குடிகள் கூட்டம் நடைபெறாது.

எனவே, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்கும்பொருட்டு நேரடியாக மனுக்களை பெறுவதைத் தவிர்க்கவும், 29.06.2020ஆம் தேதி முதல் 15.07.2020ஆம் தேதிவரை இணையவழியாக ( https://gdp.tn.gov.in/jamabandhi ) என்ற இணையதள முகவரியிலோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவோ பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும். பெறப்பட்ட மனுக்கள் 15.07.2020-க்கு பின் தீர்வு செய்யப்படும் எனவும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.