அதிராம்பட்டினம், ஜூன் 21
எஸ்டிபிஐ கட்சியின் 12 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதிராம்பட்டினத்தில் 5 இடங்களில் கொடியேற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் அகமது அஸ்லம் கட்சி அலுவலகத்திலும், மாவட்டச்செயலாளர் முகமது ரஹீஸ் தக்வா பள்ளிவாசல் சாலை முக்கத்திலும், செயலாளர் சாகுல் ஹமீது கல்லூரி முக்கத்திலும், பொருளாளர் சேக்தாவூது செக்கடிபள்ளி சாலையிலும், மாநில செயலாளர் வழக்குரைஞர் சஃபியா பேருந்து நிலையம் அருகிலும் கொடி ஏற்றி வைத்து சிறப்புரை வழங்கினர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கபசூர குடிநீர் வழங்கப்பட்டது.
முன்னதாக, அக்கட்சியின் அதிராம்பட்டினம் இணைச்செயலாளர் சி. அகமது வரவேற்றுப் பேசினார். நிறைவில், செயற்குழு உறுப்பினர் ஜர்ஜிஸ் அகமது நன்றி கூறினார்.
எஸ்டிபிஐ கட்சியின் 12 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதிராம்பட்டினத்தில் 5 இடங்களில் கொடியேற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் அகமது அஸ்லம் கட்சி அலுவலகத்திலும், மாவட்டச்செயலாளர் முகமது ரஹீஸ் தக்வா பள்ளிவாசல் சாலை முக்கத்திலும், செயலாளர் சாகுல் ஹமீது கல்லூரி முக்கத்திலும், பொருளாளர் சேக்தாவூது செக்கடிபள்ளி சாலையிலும், மாநில செயலாளர் வழக்குரைஞர் சஃபியா பேருந்து நிலையம் அருகிலும் கொடி ஏற்றி வைத்து சிறப்புரை வழங்கினர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கபசூர குடிநீர் வழங்கப்பட்டது.
முன்னதாக, அக்கட்சியின் அதிராம்பட்டினம் இணைச்செயலாளர் சி. அகமது வரவேற்றுப் பேசினார். நிறைவில், செயற்குழு உறுப்பினர் ஜர்ஜிஸ் அகமது நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.