அதிரை நியூஸ்: ஜூன் 28
தஞ்சாவூர் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் துணை நீர் மேலாண்மை திட்டத்தின் மூலமாக மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன கருவிகள், தெளிப்பு நீர் பாசன கருவிகள், மழைதூவான் போன்ற உபகரணங்கள் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனங்கள் மூலம் மானிய விலையில் அமைத்துத் தரப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூபாய் 30.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மா, வாழை, நெல்லி போன்ற பழப்பயிர்கள், வெண்டை, கத்தரி, பாகல், பூசணி, மரவள்ளி போன்ற காய்கறி பயிர்கள், மல்லிகை, ரோஜா, சம்மங்கி போன்ற மலர் பயிர்கள் ஆகிய தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும், துணை நீர் பாசன மேலாண்மை திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வட்டங்கள் மற்றும் குறுவட்டங்களில் ஆழ்குழாய் அல்லது திறந்தநிலை கிணறு அமைப்பதற்கு ரூபாய் 25,000 மானியமும், மின்மோட்டார் மற்றும் டீசல் என்ஜின் வாங்குவதற்கு ரூபாய் 15,000 மானியமும், பாசன நீர் பிவிசி பைப்புகள் வாங்குவதற்கு ரூபாய் 10,000 மானியமும், நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்திக்கொள்ள அதிகபட்சமாக ரூபாய் 40,000 மானியமும் வழங்கப்படுகிறது. துணை நீர் பாசன மேலாண்மை திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூபாய் 4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் துணை நீர் மேலாண்மை திட்டம் ஆகிய திட்டங்களில் பயன்பெற விரும்பும் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வயலின் வரைபடம், மண் மற்றும் நீர் மாதிரி அறிக்கைகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு, 04362-271880, 9443898919 ஆகிய எண்களில் தஞ்சாவூர் தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தையும், 9965362562 என்ற எண்ணில் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தையும், தஞ்சாவூர் மற்றும் பூதலூர் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் 9842184435 என்ற எண்ணிலும், ஒரத்தநாடு மற்றும் திருவோணம் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் 9488945801 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் 9943422198 என்ற எண்ணிலும், பாபநாசம், அம்மாபேட்டை மற்றும் திருவையாறு வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் 9940843213 என்ற எண்ணிலும், கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் 9655577082 என்ற எண்ணிலும், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் 9445257303 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் துணை நீர் மேலாண்மை திட்டத்தின் மூலமாக மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன கருவிகள், தெளிப்பு நீர் பாசன கருவிகள், மழைதூவான் போன்ற உபகரணங்கள் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனங்கள் மூலம் மானிய விலையில் அமைத்துத் தரப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூபாய் 30.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மா, வாழை, நெல்லி போன்ற பழப்பயிர்கள், வெண்டை, கத்தரி, பாகல், பூசணி, மரவள்ளி போன்ற காய்கறி பயிர்கள், மல்லிகை, ரோஜா, சம்மங்கி போன்ற மலர் பயிர்கள் ஆகிய தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும், துணை நீர் பாசன மேலாண்மை திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வட்டங்கள் மற்றும் குறுவட்டங்களில் ஆழ்குழாய் அல்லது திறந்தநிலை கிணறு அமைப்பதற்கு ரூபாய் 25,000 மானியமும், மின்மோட்டார் மற்றும் டீசல் என்ஜின் வாங்குவதற்கு ரூபாய் 15,000 மானியமும், பாசன நீர் பிவிசி பைப்புகள் வாங்குவதற்கு ரூபாய் 10,000 மானியமும், நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்திக்கொள்ள அதிகபட்சமாக ரூபாய் 40,000 மானியமும் வழங்கப்படுகிறது. துணை நீர் பாசன மேலாண்மை திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூபாய் 4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் துணை நீர் மேலாண்மை திட்டம் ஆகிய திட்டங்களில் பயன்பெற விரும்பும் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வயலின் வரைபடம், மண் மற்றும் நீர் மாதிரி அறிக்கைகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு, 04362-271880, 9443898919 ஆகிய எண்களில் தஞ்சாவூர் தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தையும், 9965362562 என்ற எண்ணில் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தையும், தஞ்சாவூர் மற்றும் பூதலூர் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் 9842184435 என்ற எண்ணிலும், ஒரத்தநாடு மற்றும் திருவோணம் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் 9488945801 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் 9943422198 என்ற எண்ணிலும், பாபநாசம், அம்மாபேட்டை மற்றும் திருவையாறு வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் 9940843213 என்ற எண்ணிலும், கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் 9655577082 என்ற எண்ணிலும், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் 9445257303 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.