.

Pages

Monday, June 22, 2020

கடற்கரைத்தெரு ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு!

அதிராம்பட்டினம், ஜூன் 22
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகளுக்கான இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய நிர்வாகிகளுக்கான தேர்வுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, கடற்கரைத்தெரு ஜமாஅத் முன்னாள் தலைவர் எம்.அப்துல் ரெஜாக் தலைமை வகித்தார். மஹல்லாவாசிகள் முன்னிலை வகித்தனர். இதில், தலைவராக வி.எம்.ஏ அகமது ஹாஜா, இணைத் தலைவராக பி.எஸ் செய்யது புஹாரி,  துணைத்தலைவராக எச்.ஜபருல்லாகான், செயலாளராக பி.எம்.எஸ் முகமது அமீன், இணைச்செயலாளராக ஏ.ஹாஜா நஜ்முதீன், துணைச்செயலாளர்களாக எச்.மீரா முகைதீன், எம்.பி  அகமது கபீர், எம். அஸ்ரப், எம். அஸ்ரப் அலி, எச்.அகமது, பொருளாளராக எஸ்.அன்வர் உசேன், இணைப்பொருளாளராக எஸ்.ஜெஹபர் அலி, துணைப்பொருளாளராக எம்.பக்கீர் முகைதீன், கெளரவ ஆலோசகர்களாக மவ்லவி எம்.தாஜுதீன், எம்.எஸ் முகமது பசீர், எம். அப்துல் ரெஜாக், எம். ஹாஜா நசுருதீன், எம்.லியாகத் அலிகான், என். ஹாஜா நஜ்முதீன் (சிராஜுதீன்|), எம்.முகமது இக்பால், எஸ்.எம்.என் முகமது மீரா ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் எதிர்வரும்  (01-07-2020) அன்று தொடங்கி அடுத்து இரண்டு ஆண்டுகள் வரை ஆகும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.