.

Pages

Saturday, June 27, 2020

அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் பதாகை ஏந்தி போராட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 27
கரோனா ஊரடங்கில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக தமிழகம் அழைத்து வர வேண்டும், பெட்ரோல் ~ டீசல் விலையை குறைத்திட வேண்டும், மின் கட்டணம், டோல்கேட் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும், கரோனா அபாயம் நீங்கும் வரை பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், அனைத்து கல்விக் கட்டணங்களையும் அரசே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சார்பில், இன்று (ஜூன் 27) சனிக்கிழமை தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கோரிக்கை போராட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடந்த போராட்டத்தில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் அகமது அஸ்லம் தலைமை வகித்தார்.  செயலாளர் சாகுல் ஹமீது, பொருளாளர் சேக்தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பிஎப்ஐ அமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் ஜாவித், ஊடக அணி மாவட்டத் தலைவர் முகமது அசாருதீன் உள்பட எஸ்டிபிஐ கட்சியினர் கலந்துகொண்டு கைகளில் பதாகை ஏந்தியவாறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை தெற்கு மாவட்டத்தில் 5  இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.