.

Pages

Saturday, June 20, 2020

SDPI கட்சி அதிராம்பட்டினம் பேரூர் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 20
எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட  செயற்குழுக் கூட்டம் புதுப்பட்டினத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என். முகமது புகாரி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஜெ சாகுல் ஹமீது வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவராக எஸ். அகமது அஸ்லம், பொருளாளராக என். சேக்தாவூது ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

எதிர்வரும் ஜுன் 21 ந் தேதி கட்சியின் துவக்க தினத்தை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட  அனைத்து பகுதிகளிலும் கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள், மரக்கன்று நடுதல் போன்ற நிகழ்ச்சி நடத்துவது, தஞ்சை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதத்தில்  நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதரப் பணிகளை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள அரசு அதிகாரிகள், உள்ளாட்சிதுறை, சுகாதாரத்துறை ஆகியோரை வலியுறுத்துவது, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் கடும் பொருளாதர நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் மேலும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும், ஆறு, ஏரிகளில் மேற்கொண்டு வரும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணியின் போது மண்ணை கடத்தி விற்காமல், தூர்வாரும் நீர்நிலைகளின் கரைப்பகுதிகளை பலப்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் அஸ்கர் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.