.

Pages

Tuesday, June 9, 2020

கரோனா நிவாரணம் வழங்கக்கோரி அதிராம்பட்டினத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 09
கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கும், மத்திய அரசு தனது சொந்த செலவிலேயே அனுப்பி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் எஸ்.பன்னீர் செல்வம், ஏ.எச் பசீர் அகமது, ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.சுப்பிரமணியம், இ.முகமது பாருக், எப். நிஜாமுதீன், எஸ். மீராஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.12,500 நிவராணத்தொகை வழங்க வேண்டும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கும், மத்திய அரசு தனது சொந்த செலவிலேயே அனுப்பி வைக்க வேண்டும், விவசாயிகளின் அனைத்து கடன்களை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத் திருத்தத்தை ரத்து வேண்டும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி, கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.